என் மலர்tooltip icon

    இந்தியா

    போதை பொருட்களுக்கு எதிராக போராட  வேண்டும்:  இளைஞர்களுக்கு, பாதுகாப்பு துறை மந்திரி அழைப்பு
    X

    ராஜ்நாத்சிங், தேசிய மாணவர் படை(கோப்பு படம்)

    போதை பொருட்களுக்கு எதிராக போராட வேண்டும்: இளைஞர்களுக்கு, பாதுகாப்பு துறை மந்திரி அழைப்பு

    • இந்தியா முழு திறனை எட்டுவதற்கு போதை பொருள் தடையாக உள்ளது.
    • அதிகமானோர் போதையின் பிடியில் உள்ளனர்.

    மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை சார்பில் தலைநகர் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைபொருள் ஒழிப்பு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் காணொலி காட்சி வழியாக தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    உலகின் அதிகார மையங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதற்கான பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், சில தடைகள் நமது முழு திறனை தடுக்கின்றன, அதில் போதைக்கு அடிமையாதலும் ஒன்று. அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள போதும் இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் இணைய முடியவில்லை.

    அதிகமான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் போதையின் பிடியில் உள்ளனர். இளைஞர்களே இந்த தேசத்தின் எதிர்காலம். அவர்கள் போதைக்கு அடிமையாகி விட்டால் அவர்களது எதிர்காலம் வீணாகி விடும். எனவே, நமது சுதந்திரத்திற்காக நாம் மேற்கொண்ட போராட்டத்தை போதை ஒழிப்பிற்காக தற்போது கையிலெடுக்க வேண்டும்.

    இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் போராடி சுதந்திரத்தை பெற்றுத் தந்ததை போன்று, இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாதலை எதிர்த்து போராடி அதை ஒழிக்க வேண்டும். தேசிய மாணவர் படை மாணவர்கள் போதையால் பாதிக்கப்பட்டவர்களிடம் அதன் பாதிப்புகளை எடுத்துக் கூறி அவர்களை மீட்க வேண்டும்.

    ராணுவம் எல்லையில் பாதுகாப்பது போல, தேசிய மாணவர் படையினர், போதைக்கு அடிமையாதல் போன்ற கண்ணுக்கு புலப்படாத எதிரியிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×