search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Sitaram Yechurys body donation
    X

    சீதாராம் யெச்சூரியின் உடலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கிய குடும்பத்தினர்

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
    • 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில், கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக, மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர்.

    2005 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை சீதாரம் யெச்சூரி மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

    Next Story
    ×