search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அப்போ சட்டம் ஒழுங்கு! இப்போ ஹெலிகாப்டர்.. பாஜக ஆட்சியில் எல்லாம் பார்ட் பார்ட்டா கழடுது - அகிலேஷ்
    X

    அப்போ சட்டம் ஒழுங்கு! இப்போ ஹெலிகாப்டர்.. பாஜக ஆட்சியில் எல்லாம் பார்ட் பார்ட்டா கழடுது - அகிலேஷ்

    • ஹெலிகாப்டர் பார்ட் பார்ட்டாக டிரக்கில் திருடிச் செல்லப்பட்டதாக ரவீந்திர் சிங் என்ற பைலட் போலீசில் புகார் அளித்திருந்தார்
    • பாஜக அரசு குறிப்பிட்ட சமூகங்களை குறி வைத்து என்கவுண்டர் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்

    உத்தரப் பிரதேசத்தில் ஹெலிகாப்டரே திருடுபோன சம்பவம் அம்மாநில அரசியலில் கவனம் பெற்றுள்ளது. கடந்த மே மாதம் தங்களது SAR ஏவியேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பார்ட் பார்ட்டாக டிரக்கில் திருடிச் செல்லப்பட்டதாக ரவீந்திர் சிங் என்ற பைலட் போலீசில் புகார் அளித்திருந்தார். தன்னை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் ஹெலிகாப்டரை திருடியதாக ரவீந்தர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

    ஹெலிகாப்டரே திருடுபோனதாக புகார் அளிக்கப்பட்டது இணையத்திலும் பேசுபொருளான நிலையில் இந்த விவகாரம் குறித்து உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சித் தலைவரும் மக்களவை எம்.பியுமான அகிலேஷ் யாதவ் பாஜக அரசை விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    'உத்தரப் பிரதேசத்தில் இதுவரை கொலை, திருட்டு, மோசடி,பலாத்காரம் உள்ளிட்டவை மூலம் குற்றவாளிகள் பாஜக அரசின் சட்டம் ஒழுங்கை தான் பார்ட் பார்ட்டாக ஆக பிரித்துக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஹெலிகாப்டரையும் பார்ட் பார்ட்டாக பிரித்து திருடிச் சென்றுள்ளனர். இது விமான நிலைய பாதுகாப்பை கேள்விக்குறி ஆகியுள்ளது என்று விமர்சித்துள்ளார்.

    இதற்கு பதிலளித்த உ.பி போலீஸ், திருடுபோன ஹெலிகாப்டர், விமான நிலையத்தில் வைத்து திருடு போகவில்லை எனவும் SAR ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து மற்றொரு நிறுவனம் அந்த ஹெலிகாப்டரை வாங்கி டிரக்கில் கொண்டு செல்லும்போது திருடு போனதாக புகார் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக உ.பியில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் சமீபத்தில் போலீஸ் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்த அகிலேஷ் யாதவ், பாஜக அரசு குறிப்பிட்ட சமூகங்களை குறி வைத்து என்கவுண்டர் செய்து வருவதாக குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×