search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    திருப்பதியின் புனிதம் மீட்கப்படும் - தேவஸ்தான நிர்வாக அதிகாரி நம்பிக்கை
    X

    திருப்பதியின் புனிதம் மீட்கப்படும் - தேவஸ்தான நிர்வாக அதிகாரி நம்பிக்கை

    • முதலமைச்சர், முன்னாள் முதல்வர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
    • லட்டில் மாட்டிறைச்சி கொழுப்புகலக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தும் லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து ஆந்திராவின் தற்போதைய முதலமைச்சர், முன்னாள் முதல்வர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

    லட்டு விவகாரம் இந்து மத நம்பிக்கைகளை புன்படுத்தியுள்ள நிலையில் திருப்பதி தேவாஸ்தான அதிகாரிகள் இது குறித்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இது குறித்து பேசிய திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி ஷாமலா ராவ் திருப்பதி புனிதத்தன்மை மீட்கப்படும் என நம்புவதாக தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "வெங்கடேச பெருமானுக்கு நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகள் அல்லது சமயச் சடங்குகளின் போது ஏதேனும் 'தோஷங்கள்' நடந்திருப்பதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளின் போது உணவு மாதிரிகளை நறுமணம், சுவை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது."

    "பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், அவர்கள் அமைதியான மனதுடன் பிரார்த்தனை செய்யவும், நாளை ஒரு நாள் 'சம்ப்ரோக்ஷணம்' மற்றும் 'சாந்தி ஹோமம்' நடத்தப்படும். இதன் மூலம், ஆலயத்தின் புனிதம் மீட்கப்படும் என நம்புகிறோம்," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×