search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவின் நம்பர் 1 பயங்கரவாதி ராகுல் காந்தி: மத்திய மந்திரி சர்ச்சை பேச்சு
    X

    இந்தியாவின் நம்பர் 1 பயங்கரவாதி ராகுல் காந்தி: மத்திய மந்திரி சர்ச்சை பேச்சு

    • வாஷிங்டனில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் ராகுல் காந்தி சீக்கியர்கள் குறித்து பேசினார்.
    • ராகுல் காந்தியின் கருத்துக்கு பல்வேறு சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் அமெரிக்காவுக்கு பயணம் செய்தார்.

    வாஷிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவாரா, குருத்வாரா செல்ல அனுமதிக்கப்படுவாரா, அதற்கே இங்கு சண்டை நடக்கிறது என கூறியிருந்தார்.

    ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. பல்வேறு சீக்கிய அமைப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய இணை மந்திரி ரவ்நீத்சிங் பிட்டு, இந்தியாவின் நம்பர் 1 பயங்கரவாதி ராகுல் காந்தி என கடுமையாக தாக்கி விமர்சனம் செய்துள்ளார்.

    இதுதொடர்பாக, மத்திய மந்திரி ரவ்நீத்சிங் பிட்டு கூறியதாவது:

    ராகுல் காந்தி தமது தாய்நாட்டை அதிகம் நேசிப்பது இல்லை. என் கருத்துப்படி அவர் ஒரு இந்தியரும் அல்ல.

    ஏன் என்றால் வெளிநாடுகளுக்குச் சென்று தவறாக நமது நாட்டைப் பற்றி பேசுகிறார்.

    அவரின் பேச்சுக்களை பிரிவினைவாதிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் தயாரிப்பவர்கள் தான் பாராட்டி உள்ளனர் என்றால் அவர் தான் நம்பர் 1 பயங்கரவாதி.

    என் கருத்துப்படி யாரையாவது அல்லது நாட்டின் மிக பெரிய எதிரியை பிடித்தால் வெகுமதி அளிக்கப்பட வேண்டும் என்றால் அது ராகுல் காந்தி தான் என தெரிவித்தார்.

    Next Story
    ×