என் மலர்
இந்தியா

மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு காங்கிரஸ் தலைவர் கார்கேவுடன் சந்திப்பு
- மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.
- சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டுக்குச் சென்றார். அவரை சந்தித்து பாராளுமன்ற கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
Next Story






