search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜம்மு காஷ்மீரில் மகளிருக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு
    X

    ஜம்மு காஷ்மீரில் மகளிருக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்: காங்கிரஸ் அறிவிப்பு

    • ஜம்மு காஷ்மீரில் காங்கிரசும், தேசிய மாநாட்டு கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன.
    • அங்கு ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மூன்று கட்டமாக நடைபெறும் தேர்தலில் பதிவாகும் அனைத்து வாக்குகளும் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டு கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன. ஜம்மு காஷ்மீரில் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலையொட்டி அனந்தநாக் மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    ஜம்மு காஷ்மீரில் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3000 வழங்கப்படும்.

    அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.25 லட்சத்தில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.

    ஒரு லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்புதல், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 11 கிலோ அரிசி வழங்கப்படும்.

    சுய உதவிக் குழுப் பெண்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் குடியேறிய காஷ்மீர் பண்டிட்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும்.

    பொது விநியோக திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு 11 கிலோ தானியம் வழங்கப்படும்.

    ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைகளை பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் பறித்துவிட்டனர். அவ்வாறு பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுப்போம் என்பதே எங்களின் வாக்குறுதி என தெரிவித்தார்.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் கவனம் பெற்று வருகிறது.

    Next Story
    ×