search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நைட் ஷிப்ட் செல்லும் பெண்கள் பாதுகாப்புக்கு மேற்கு வங்காள அரசு புதிய திட்டம் - சிறப்பம்சங்கள் என்ன?
    X

    நைட் ஷிப்ட் செல்லும் பெண்கள் பாதுகாப்புக்கு மேற்கு வங்காள அரசு புதிய திட்டம் - சிறப்பம்சங்கள் என்ன?

    • இரவில் துணைவருபவர்கள் என்று பொருள்படும் 'ராத்திரேர் ஷாதி' [Rattirer Sathi] என்ற புதிய திட்டத்தை மேற்கு வங்காள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
    • இரவில் பெண் தன்னார்வலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்துவது, உள்ளிட்ட அம்சங்கள் அதில் உள்ளன

    மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் வேலைக்கு பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது

    மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தின்மூலம் அரசுக்கு தங்களது எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர்.மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.

    இதற்கிடையில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள அரசு, நைட் சஷிப்ட் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரவில் துணைவருபவர்கள் என்று பொருள்படும் 'ராத்திரேர் ஷாதி' [Rattirer Sathi] என்ற புதிய திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தின்படி,

    நகர்களில் முழு சிசிடிவி கண்காணிப்புகளுடன் கூடிய பாதுகாப்பு மண்டலங்களை [safe zones] உருவாக்குவது, இரவில் பெண் தன்னார்வலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்துவது,

    ஆபத்து சமயங்களில் போலீசை உடனே தொடர்பு கொள்ள ஏற்ற வகையில் உள்ளூர் காவல் நிலையங்கள் மற்றும் கண்ரோல் ரூம்களுடன் இணைக்கப்பட்ட அலாரம் சிஸ்டம் கொண்ட பிரத்தியேக செல்போன் செயலியை உருவாக்கி வேலைக்கு செல்லும் பெண்கள் அதை பதிவிறக்கம் செய்வதைக் கட்டாயமாக்குவது,

    மருத்துவமனைகள், பெண்கள் விடுதிகள், கல்லூரிகளில் நுழையும் நபர்கள் மது அருந்தியதை கண்டறியும் ப்ரீத் அனலைசர் சோதனையை கட்டாயமாக்குவது,

    மருத்துவமனைகளில் உள்ள ஒவ்வொரு தளத்திலும் பெண்களுக்கான கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவது,

    பெண்கள் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் போலீஸ் ரோந்தை அதிகரிப்பது,

    தெளிவாக தெரியும் வகையில் அடையாள அட்டைகளை மருத்துவமனை மற்றும் கல்லூரியை சேர்நதவர்கள் அணிவதை கட்டாயமாக்குவது,

    இங்குள்ள செக்யூரிட்டிகளை போலீஸ் மேற்பார்வையில் கொண்டுவருவது,

    பெண்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யாமல் இருப்பதை உறுதிப் படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும் பெண்கள் முடிந்த அளவு நைட் ஷிப்டை தவிர்க்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    Next Story
    ×