search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    doctors protest
    X

    பெண் டாக்டர் கொலை: 24 மணி நேரம் மருத்துவ சேவைகளை ரத்து செய்ய மருத்துவர்கள் முடிவு

    • பெண் மருத்துவர் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டார்.
    • பெண் மருத்துவர் படுகொலையை எதிர்த்து போராட்டம் தீவிரம்.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணையை துவங்கினர். எனினும், உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை காவல் துறை 90 சதவீதம் வரை முடித்துவிட்டது என்றும் சிபிஐ இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி இருந்தார்.

    மேலும் வருகிற ஞாயிற்றுக் கிழமை இந்த வழக்கின் குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நவீன மருத்துவத்திற்கான டாக்டர்கள் நாடு தழுவிய மருத்துவ சேவைகளை வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.


    இதன்படி, ஆகஸ்டு 17 ஆம் தேதி காலை 6 மணி தொடங்கி, ஆகஸ்டு 18 ஆம் தேதி காலை 6 மணி வரை மருத்துவ சேவைகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்து உள்ளனர். இதற்கான அறிவிப்பை இந்திய மருத்துவ கூட்டமைப்பு வெளியிட்டு உள்ளது. இந்த 24 மணிநேரத்தில், வழக்கம்போல் நடைபெறும் வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது. எனினும், பிற அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

    மருத்துவர்களின் நியாயமான காரணங்களுக்கு நாட்டின் இரக்கம் எங்களுக்கு தேவை. மருத்துவர்கள் போராட்டத்திற்கு வங்காள திரையுலகம் மற்றும் தொலைக்காட்சி துறையை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து அவர்களுடன் போரட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

    Next Story
    ×