search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    EVM இயந்திரத்தை சேதப்படுத்தும் YSR காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமகிருஷ்ண ரெட்டி!- அதிர்ச்சி வீடியோ
    X

    EVM இயந்திரத்தை சேதப்படுத்தும் YSR காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமகிருஷ்ண ரெட்டி!- அதிர்ச்சி வீடியோ

    • மாச்சர்லா தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி 4-வது முறையாக போட்டியிட்டார்.
    • இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 13ம் தேதி தேர்தல் நடந்தது. வாக்குபதிவின்போது பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

    பல்நாடு மாவட்டம் மாச்சர்லா தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி 4-வது முறையாக போட்டியிட்டார். இந்நிலையில் இவர் பால்வாய் கேட் வாக்குச் சாவடியில் வி.வி.பேட் இயந்திரத்தை உடைத்தார்.

    இந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் மாச்சர்லா தொகுதியின் எம்.எல்.ஏ.பால்வாய் கேட் வாக்குச்சாவடி மையத்திற்குள் சென்றார். அப்போது அங்கு ஒரு தேர்தல் அதிகாரி அவரை வரவேற்க எழுந்து நிற்கிறார்.

    ஒரு வார்த்தை கூட பேசாமல், எம்.எல்.ஏ, ஈ.வி.எம். வைக்கப்பட்டுள்ள மூடப்பட்ட பகுதிக்குள் நுழைந்து, விவிபேட்-ஐ எடுத்து, தரையில் பலமாக வீசுகிறார்.

    இயந்திரம் உடைந்து ஒரு பாகம் வெளியேறுகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஒருவர் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்தார்.

    எம்.எல்.ஏ அருகே சென்று தடுத்து நிறுத்தும் முன்பு, எம்.எல்.ஏ., அலட்சியமாக வெளியே செல்கிறார். அவர் வெளியே செல்வதற்கு முன் தனது உதவியாளரை தாக்கியவரை எச்சரிக்கை செய்து செல்கிறார்.

    இந்த வீடியோ காட்சிகளை வைத்து பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி, மாச்சர்லா சட்டமன்றத் தொகுதியில் 7 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களைகளை சேதப்படுத்துவது கேமராவில் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, இதுபோன்ற அனைத்து வாக்குச்சாவடிகளின் வீடியோ காட்சிகளையும், பல்நாடு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

    இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்து, நடவடிக்கை எடுக்க ஆந்திர மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி முகேஷ் குமாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திராவில் தேர்தல் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் காரணமாக, ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்ட பிறகும், 25 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×