search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    42 ஆண்டுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சம்பவம்
    X

    42 ஆண்டுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சம்பவம்

    • டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • இந்திய அணி முதல்நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை 339 ரன்களை குவித்தது.

    இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முதல் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி முதல்நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை 339 ரன்களை குவித்தது.

    பொதுவாக சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 'டாஸ்' ஜெயிக்கும் அணிகள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும். ஆனால் நேற்றைய டெஸ்டில் வங்காளதேச அணி டாஸ் ஜெயித்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கு 'டாஸ்' ஜெயித்து ஒரு அணி முதலில் பந்து வீசுவது 42 ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். கடைசியாக 1982-ம் ஆண்டு இந்தியா- இங்கிலாந்து டெஸ்டில் இவ்வாறு நடந்தது. அந்த போட்டி டிராவில் முடிந்தது.

    Next Story
    ×