என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியாவை அவமதித்துவிட்டீர்கள்: இங்கிலாந்து அணி மீது பீட்டர்சன் குற்றச்சாட்டு
    X

    இந்தியாவை அவமதித்துவிட்டீர்கள்: இங்கிலாந்து அணி மீது பீட்டர்சன் குற்றச்சாட்டு

    • இங்கிலாந்து வீரர்கள் ஒரேயொரு நெட் செசனில் பயிற்சி மேற்கொண்டதாக தகவல்.
    • ஜோ ரூட் மட்டும் பேட்டிங் பயிற்சி மேற்கொண்ட நிலையில் பீட்டர்சன் இங்கிலாந்து அணி மீது குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த மூன்று போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

    இந்தியாவுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்துள்ள இங்கிலாந்து, இந்தியாவின் சூழ்நிலை மற்றும் இந்தியாவை அவமரியாதை செய்துவிட்டது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர கெவின் பீட்டர்சன் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். ஒருநாள் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை என்ற செய்தியை கேட்டு பீட்டர்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியின்போது ரவி சாஷ்திரி "நான் கேள்வி பட்டதில் இருந்து, ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து ஒரேயொரு நெட் செசனில் மட்டுமே ஈடுபட்டுள்ளது. நீங்கள் கடினமான முறையில் தயாராகவில்லை என்றால், நீங்கள் போட்டியின் முடிவை நோக்கி செல்ல முடியாது" எனத் தெரிவித்தார்.

    இதற்கு கெவின் பீட்டர்சன் பதில் அளித்து கூறுகையில் "நானும் ரவி சாஷ்திரியும், இங்கிலாந்து வீரர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரமாக பயிற்சி எடுத்திருப்பார்கள் என பேசிக் கொண்டிருந்தோம். நாக்பூர் போட்டிக்கு முன்னதாக ஒரேயொரு பயிற்சி செசன் மட்டும் எடுத்துள்ளனர். அதன்பிறகு பயிற்சி மேற்கொள்ளவில்லை. ஜோ ரூட் மட்டும் வலைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். நீங்கள் ஆசிய கண்டத்திற்குள் விளையாட வந்துவிட்டு, பயிற்சி எடுக்க மாட்டேன் என்ற தவறுடன் வர முடியாது.

    ஒரு தொடரில் எந்த விதமான பயிற்சியும் இன்றி சிறப்பாக விளையாடுவேன் எனும் ஒரு விளையாட்டு வீரர் கிடையாது. அது ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி.

    மிகவும் வருத்தமாக இருக்கிறது. முதல் போட்டியில் இருந்து இங்கிலாந்து பயிற்சி மேற்கொள்வில்லை என்பதை கேட்டு திடுக்கிட்டு போனேன். முற்றிலும் திகைத்துப் போனேன்" என்றார்.

    மேலும், தனது எக்ஸ் பக்க பதிவில் "அனுபவியுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் இது சிறந்த நேரம். கோல்ஃப் விளையாடுங்கள். இங்கிலாந்திற்காக விளையாடுவதை மிகவும் ரசிக்கவும். ஆனால், கிரிக்கெட் கூற்றுப்படி ரன்கள் குவிப்பதற்கு பணம் பெறுகிறீர்கள். கிரிக்கெட் போட்டிகளை வெல்ல பணம் பெறுகிறீர்கள். கோல்ஃப் விளையாட பணம் பெறவில்லை. இது கோல்ஃப் தொடர் அல்ல. இது கிரிக்கெட் தொடர்.

    இங்கிலாந்து அணிக்காக போட்டியில் அனைத்தையும் கொடுத்துள்ளேன். இதனால் இங்கிலாந்துக்கு புறப்படக்கூடிய விமானத்தில் ஏறுவேன் என சொல்லக்கூடிய ஒரு வீரர் கூட இல்லை. ஜோ ரூட் மட்டும் சொல்லலாம். ஏனென்றால் அவர் பயிற்சி மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்து அணி வெற்றிக்காக சிறந்த பங்களிப்பை கொடுத்தோம் எனக்கூற ஒரு வீரர் கூட இல்லை. இது எனக்கு வர்த்தமாக இருக்கிறது" என்றார்.

    Next Story
    ×