search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சேப்பாக்கம் டெஸ்ட்: சொந்த மண்ணில் சதம் அடித்து அசத்திய அஷ்வின் - முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 339/6
    X

    சேப்பாக்கம் டெஸ்ட்: சொந்த மண்ணில் சதம் அடித்து அசத்திய அஷ்வின் - முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 339/6

    • முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • அஷ்வின், ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

    இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி ஜெய்ஸ்வால்- ரோகித் சர்மா ஜோடி களம் இறங்கியது.

    வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் முகமது பந்து வீச்சை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். இவரது பந்து வீச்சில் ரோகித் சர்மா (6), சுப்மன் கில் (0), விராட் கோலி (6) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    அடுத்து ஜெய்ஸ்வால் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ஜெய்ஸ்வால் 56 ரன்களிலும், ரிஷப் பண்ட் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். ரவிச்சந்திரன் அஷ்வின் சதமடித்து அசத்தினார். 108 பந்துகளில் சதம் கடந்த அஷ்வின் பத்து பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் அடங்கும்.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது. இந்தியா சார்பில் அஸ்வின் 102 ரங்களுடனும், ஜடேஜா 86 ரங்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேசம் சார்பில் ஹாசன் முகமது 4 விக்கெட்டுகளையும் நஹித் ராணா மற்றும் மெஹிடி ஹாசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    Next Story
    ×