என் மலர்
ஐ.பி.எல்.
- சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.
- ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதி நடைபெறுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.
இந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் IPL போட்டிகள்:
மார்ச் 23: சி.எஸ்.கே. Vs மும்பை இந்தியன்ஸ்
மார்ச் 28: சி.எஸ்.கே. Vs பெங்களூரு
ஏப்ரல் 05: சி.எஸ்.கே. Vs டெல்லி
ஏப்ரல் 11: சி.எஸ்.கே. Vs கொல்கத்தா
ஏப்ரல் 25: சி.எஸ்.கே. Vs ஹைதராபாத்
ஏப்ரல் 30: சி.எஸ்.கே. Vs பஞ்சாப்
மே 12 : சி.எஸ்.கே. Vs ராஜஸ்தான்
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் IPL போட்டிகள்:
மார்ச் 31 : மும்பை Vs கொல்கத்தா
ஏப்ரல் 7 : மும்பை Vs பெங்களூரு
ஏப்ரல் 17: மும்பை Vs ஐதாராபாத்
ஏப்ரல் 20: மும்பை Vs சென்னை
ஏப்ரல் 27: மும்பை Vs லக்னோ
மே 6 : மும்பை Vs குஜராத்
மே 15 : மும்பை Vs டெல்லி
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் IPL போட்டிகள்:
ஏப்ரல் 2 : பெங்களூரு Vs குஜராத்
ஏப்ரல் 10 : பெங்களூரு Vs டெல்லி
ஏப்ரல் 18 : பெங்களூரு Vs பஞ்சாப்
ஏப்ரல் 24 : பெங்களூரு Vs ராஜஸ்தான்
மே 3 : பெங்களூரு Vs சென்னை
மே 13 : பெங்களூரு Vs ஐதாராபாத்
மே 17 : பெங்களூரு Vs கொல்கத்தா
குவாலிபியர் 1 போட்டி மே 20 ஆம் தேதியும் எலிமினேட்டர் போட்டி மே 21 ஆம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. குவாலிபியர் 2 போட்டி மே 23 ஆம் தேதியும் ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதியும் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐபிஎல் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.
- ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதி நடைபெறுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.
இந்நிலையில், ஐ.பி.எல். 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்தான் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
குவாலிபியர் 1 போட்டி மே 20 ஆம் தேதியும் எலிமினேட்டர் போட்டி மே 21 ஆம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. குவாலிபியர் 2 போட்டி மே 23 ஆம் தேதியும் ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதியும் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக போட்டிகள் நடைபெறும்- அகமதாபாத், மும்பை, சென்னை, பெங்களூரு, லக்னோ, முலான்பூர், டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் ஐதராபாத் என பத்து இடங்களுடன் கவுகாத்தி மற்றும் தரம்சாலாவிலும் இந்த முறை ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற உள்ளது.
- மும்பை இந்தியன்ஸ் அணியால் ஆப்கான் வீரர் அல்லா கசன்ஃபர் ரூ.4.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
- இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ளது.
ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற அணி மும்பை இந்தியன்ஸ். இறுதி போட்டிக்கு வந்த 5 முறை கோப்பையை கைப்பற்றிய ஒரே அணியாக மும்பை உள்ளது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.4.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கசன்ஃபர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் அல்லா கசன்ஃபருக்கு பதிலாக மாற்று வீரராக மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்ட்டுள்ளார்.
முஜீப் உர் ரஹ்மானை ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள முஜீப் உர் ரஹ்மான் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- குமார சங்ககாரா இங்கிலாந்து ஒயிட்-பால் அணிக்கு பயிற்சியாளராக செல்ல வாய்ப்பு.
- அதனால் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் ஏற்க உள்ளதாக தகவல்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட், இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். இதனால் ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சியாளராக முடியாமல் இருந்தது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் 2014-ம் ஆண்டு வரை வீரராக விளையாடினார். அதன்பின் பயிற்சியாளராக செயல்பட்டார். பின்னர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பையுடன் அவரது தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒரு அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டரை முதல் மூன்று மாதம் என்பதால் அதை ஏற்பதில் சிரமம் இருக்காது. பெரும்பாலான பயிற்சியாளர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கையை சேர்ந்த சங்ககாரா உள்ளார். இவர் இங்கிலாந்து ஒயிட்-பால் அணி பயிற்சியாளர் பதவியை ஏற்பார் எனத் தெரிகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சங்கக்கராவை நியமிக்க விரும்புவதாக தெரிகிறது. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்பது குறித்து சங்கக்கராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சங்கக்கரா மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
இதனால் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியை சங்ககாரா ஏற்றுக்கொண்டால், ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக ஷேன் பாண்ட், டிரேவர் பென்னி இருந்து வருகிறார்கள்.
இங்கிலாந்து ஒயிட்-பால் கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து மேத்யூ மோட் வெளியேற இருக்கும் நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அவருக்கு மாற்று பயிற்சியாளரை தேடிவருகிறது.
- 46 வயதான வாசிம் ஜாபர் இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
- 2019 முதல் 2021 வரை ஏற்கனவே பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பெய்லிஸ் இருந்து வந்தார். அவருடைய இரண்டு வருட ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் வாசிம் ஜாபரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க பஞ்சாப் அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
46 வயதான வாசிம் ஜாபர் இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2019 முதல் 2021 வரை ஏற்கனவே பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். 2022 ஐபிஎல் ஏலத்திற்க முன்னதாக பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.
2014-ல் இருந்து பஞ்சாப் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது கிடையாது, 2024 சீசனில் 262 இலக்கை எட்டி, ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்னை சேஸிங் செய்த அணி என்ற பெருமையை பெற்றது.
உலகக் கோப்பை வென்ற பயிற்சியாளராக பெய்லிஸ் இருந்தார். மேலும் இரண்டு முறை கேகேஆர் கோப்பையை வென்றபோது பயிற்சியாளராக இருந்துள்ளார். ஆனால் பஞ்சாப் அணிக்காக அவரால் கோப்பை வென்று கொடுக்க முடியவில்லை.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
- பாலிவுட் பாடல்களுக்கு நடனம் ஆடும் வீடியோ வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த 2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பை வென்று அசத்தியது. இதன் மூலம் அந்த அணி மூன்றாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பாலிவுட் பாடல்களுக்கு நடனம் ஆடும் காட்சிகள் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஷ்ரேயஸ் அய்யர், ஷாருக் கான் படத்தின் "லுங்கி டான்ஸ்" பாடலுக்கு மிகவும் உற்சாகமாக நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று மற்ற கொல்கத்தா வீரர்களும் நடனம் ஆடும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
- ஐ.பி.எல். 2024 தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது.
- மைதான பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் உண்மையான ஹீரோக்கள் மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தான் என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.பி.எல். போட்டிகளை நடத்திய மைதானத்தின் பணியாளர்கள், பொறுப்பாளர்களுக்கு அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
"சமீபத்திய டி20 சீசனின் உண்மையான கதாநாயகர்கள் அயராது உழைத்த மைதான பராமரிப்பாளர்கள் தான். அவர்கள் தான் கடினமான வானிலையின் போதும், தலைசிறந்த பிட்ச்களை உருவாக்குவதில் சிறப்பாக ஈடுபட்டனர்."
"அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பத்து ஐ.பி.எல். மைதானங்களின் பராமரிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ரூ. 25 லட்சமும், கூடுதலாக மூன்று மைதானங்களின் ஊழியர்களுக்கு ரூ. 10 லட்சமும் வழங்கப்படும்," என்று ஜெய் ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐ.பி.எல். 2024 பத்து மைதானங்கள் பட்டியலில் - மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, சண்டிகர், ஐதராபாத், பெங்களூரு, லக்னோ, ஆமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
- ரியான் பராக் நேற்று யூடியூப் நேரலையில் கேம் விளையாடுவதை நேரலை செய்தார்.
- அனன்யா பாண்டே ஹாட் மற்றும் சாரா அலி ஹான் ஹாட் போன்ற விஷயங்களை அவர் தேடியது அம்பலமானது.
சென்னை:
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 3-வது இடத்தை பிடித்தது. ஐதராபாத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2-வது போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து வெளியேறியது.
அதேபோல் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக்கிற்கு சிறந்த சீசனாக அமைந்தது. 14 போட்டிகளில் விளையாடி 4 அரைசதம் உட்பட 573 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் ரியான் பராக் நிறைவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இளம் வீரர் ரியான் பராக் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அவர் யூடியூபில் பாலிவுட் நடிகைகளின் ஹாட் வீடியோக்களை தேடி பார்த்துள்ளது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் நேற்று யூடியூப் நேரலையில் கேம் விளையாடுவதை நேரலை செய்தார். இதில் தான் ரியான் பராக் பிரச்சனையில் சிக்கினார்.
யூடியூப் தலத்தில், இலவச மியூசிக் தேட அவர் தொடங்கியபோது, அவர் ஏற்கனவே தேடியிருந்த சில விஷயங்கள் அப்பட்டமாக அந்த லைவ் ஸ்ட்ரீமில் தெரியவந்துள்ளது. அதில் அனன்யா பாண்டே ஹாட் மற்றும் சாரா அலி ஹான் ஹாட் போன்ற விஷயங்களை தேடியது அம்பலமானது.

ரியான் பராக்கின் தேடல் தொடர்புடைய ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. இதனால் ரியான் பராக் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. பாலிவுட் நடிகைகளின் ஹாட் வீடியோக்களை தேடி ரியான் பராக் பார்த்துள்ளதால் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
- ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா கோப்பை வென்றது.
- ஹைதராபாத் அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்த காவ்யா மாறன் அவர்களை பாராட்டி பேசினார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.
அப்போட்டியை நேரில் கண்டு ரசித்த ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், ஹைதராபாத் அணியின் தோல்வியை கண்டு கண்ணீர் விட்டு அழுதார். அதை மறைத்து சிரித்தபடியும் அவரது அணியின் வீரர்களுக்கு கைதட்டி வரவேற்றார்.
அதன் பிறகு ஹைதராபாத் அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்த அவர் வீரர்களுக்கு உத்வேகம் ஊட்டினார்.
அதில், "நீங்கள் அனைவரும் எங்களை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். அதை உங்களிடம் கூறவே நான் இங்கு வந்தேன். டி20 கிரிக்கெட் விளையாடும் விதத்தை நீங்கள் மாற்றியுள்ளீர்கள். இன்று எல்லாரும் நம்மை பற்றி பேசுகிறார்கள். எல்லா நாளும் நமக்கு வெற்றி கிடைப்பதில்லை. ஆனாலும் நீங்கள் அருமையாக விளையாடினீர்கள். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி, நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்" என்று பேசியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆஸ்திரேலிய அணிக்காக பிரான்சிஸ் கிரிக்கெட்டை தவிர்த்து வந்தார்.
- டி20 உலகக் கோப்பை தொடர் வருவதால், இந்த முறை முழுமையாக விளையாட முடிவு செய்தார்.
ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். தனது துல்லியமான யார்க்கர் மற்றும் ஸ்விங் பந்துகளால் பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர். பிரான்சிஸ் உரிமையாளர்கள் (ஐபிஎல் அணி உரிமையாளர்கள்) கோடிக்கணக்கில் பணம் கொடுத்து இவரை ஏலத்தில் எடுக்க தயாராக இருந்தனர். இருந்தபோதிலும் நாட்டிற்காக விளையாடுவதே முக்கியம் எனக் கூறி ஐபிஎல் கிரிக்கெட்டை தவிர்த்து வந்தார்.
இவர் 2014 மற்றும் 2015-ல் மட்டுமே விளையாடியுள்ளார். இந்த வருடம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பதையொட்டி ஐபிஎல் தொடரில் முழுவதுமான இடம் பெறுவேன் என அறிவித்தார். இதனால் கொல்கத்தா அணி 24.75 கோடி ரூபாய் கொடுத்து ஸ்டார்க்கை ஏலம் எடுத்தது. அப்போது இவருக்கு இவ்வளவு தொகையா? என விமர்சனம் எழுந்தது.
விமர்சனத்திற்கு பதில் கொடுக்கும் விதமான குவாலிபைய-1 மற்றும் இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி அசத்தினார். இரண்டு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இதனால் அடுத்த வருடமும் விளைாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பும்போது பிரான்சிஸ் போட்டிகளில் விளையாட வேண்டுமென்றால் அதற்காக ஒருநாள் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும் என சூசகமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது:-
கடந்த 9 ஆண்டுகளாக நான் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிற்கு முன்னுரிமை கொடுத்து வந்தேன். இதற்காக என்னுடைய உடலுக்கு ஓய்வு கொடுக்கவும், மனைவியுடன் நேரத்தை செலழிக்கவும் எனக்கு நானே வாய்ப்பு கொடுத்துக் கொண்டேன். இதனால் கடந்த 9 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் மட்டுமே கவனத்தில் இருந்தது. பிரான்சிஸ் கிரிக்கெட்டில் விளையாடுவதை தவிர்த்து வந்தேன்.
நான் தற்போது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தை விட முடிவு கட்டத்தில் உள்ளேன். ஒரு விடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம். அடுத்த ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நீண்ட காலம் உள்ளது. இது எனக்கு தொடர்கிறதோ... இல்லையோ... இது அன்னும் அதிகப்படியான பிரான்சிஸ் கிரக்கெட்டிற்கு வழி வகுக்கும்.
அடுத்த வருடம் சரியான போட்டி அட்டவணை எனக்குத் தெரியாது. இருந்த போதிலும் அடுத்த வருடத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். அடுத்த வருடமும் கொல்கத்தா அணிக்காக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
- எங்கு சென்றாலும் எடுத்து செல்வேன் என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
- கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
மூன்றாவது முறை கோப்பையை வென்ற கொல்கத்தா அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் ஐ.பி.எல். கோப்பையுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது தொடர்பான பதிவில், "எங்கு சென்றாலும் எடுத்து செல்வேன்," என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்றதும் கொண்டாடியதை போன்றே கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அந்த வரிசையில், தற்போது எங்கு சென்றாலும் கோப்பையுடன் செல்வேன் என்ற பாணியில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
- ஹர்ஷித் ராணா 11 இன்னிங்சில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- வைபவ் ஆரோரா 10 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கொல்கத்தா அணி இந்த முறை கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணி என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் பேட்டிங் யூனிட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுனில் நரைன் இணைந்தார். இது கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக அமைந்தது.
மிகப்பெரிய அனுபவ வீரரான மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் இருந்த போதிலும், இவரது பந்து வீச்சு எடுபடாமல் போனது. இதனால் 24 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது வேஸ்ட் என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
ஆனால் ஸ்டார்க் பலவீனம் ஹர்ஷித் ராணா, வைபஸ் ஆரோரோ ஆகியோரால் மறைக்கப்பட்டது. இரு இளம் வீரர்கள் சிறப்பாக பந்து வீச்சை வெளிப்படுத்தினர். ஸ்விங், ஸ்லோவர் ஒன், ஸ்லோ பவுன்சர் என அசத்தினர். பிளேஆஃப் சுற்று மற்றும் இறுதி போட்டியில் ஸ்டார்க் அசத்திய வேறுகதை.
இறுதிப் போட்டியில் வைபவ் ஆரோரா பந்தில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தது சிறந்த அவுட் ஸ்விங் பந்தாகும் (இடது கை பேட்ஸ்மேனுக்கு). மேலும் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானாக திகழ்ந்தார்கள்.
கொல்கத்தா அணியின் பந்து வீச்சு சிறப்பாக அமைய, அந்த அணியின் பந்து வீச்சாளர் பரத் அருண் முக்கிய பங்காற்றினார் என்றால் அது மிகையாகாது.
இவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர். இவரது காலத்தில்தான் இந்தியா வேகபந்து வீச்சில் முக்கியத்துவம் பிடித்தது. வெளிநாட்டு ஆடுகளங்களில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கி சாதனைகள் படைத்தது. பும்ரா, முகமது சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் ஜொலித்தனர். ஜொலித்து வருகின்றனர்.
அதேபோல் கொல்கத்தா அணியிலும் இளம் வீரர்களிடம் இருக்கும் திறமையை கண்டறிந்து வெளிப்படுத்த முக்கிய காரணமக இருந்துள்ளார். இதனால் கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த மறைமக கதாநாயகன் என்று இவரை அழைக்கலாம்.
ஹர்ஷித் ராணா 13 போட்டிகளில் 11 போட்டிகளில் பந்து வீசி 19 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். வைபவ் ஆரோரா 10 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஸ்டார்க் 17 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
சுனில் நரைன் 17 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 21 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார். பஞ்பாப் வீரர் ஹர்ஷல் பட்டேல் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை கைப்பற்றினார்.