என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

15.3 ஓவரே தாக்குப்பிடித்த பஞ்சாப்- கொல்கத்தாவுக்கு 112 ரன்கள் இலக்கு
- பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார்.
- கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதிவருகின்றனர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா 22, ஷ்ரேயாஸ் 0 என ஒரே ஓவரில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Next Story






