என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    நான் மகிழ்ச்சியாக இல்லை.. டாஸ் போடும்போது ரிஷப் பண்ட் கூறியது சர்ச்சை
    X

    நான் மகிழ்ச்சியாக இல்லை.. டாஸ் போடும்போது ரிஷப் பண்ட் கூறியது சர்ச்சை

    • ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ- கொல்கத்தா அணிகள் மோதுகிறது.
    • இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    கொல்கத்தா:

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ- கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இது குறித்து பேசிய அவர், நாங்கள் முதலில் பந்து வீச இருக்கின்றோம். ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது. தற்போது பெரிய அளவு வெப்பம் இல்லை. அதனால் ஆடுகளமும் பெரிய அளவு மாறாது என நினைக்கிறேன். மைதானத்தில் ஒரு பக்கம் பவுண்டரி அளவு சிறியதாக இருக்கிறது. இதனால் தான் நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறோம் என்றார்.

    இதனை தொடர்ந்து பேசிய பண்ட், லக்னோ அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது என்று கேட்கப்பட்டதற்கு நான் மகிழ்ச்சியாக இருப்பதாக கூற மாட்டேன். எங்கள் அணியில் இருக்கும் நல்ல விஷயங்களை நாங்கள் எடுத்துக் கொள்கின்றோம். ஒரு கேப்டனாக என் அணி வென்றால் நான் மகிழ்ச்சி அடைவேன். நாங்கள் அதே பிளேயிங் லெவன் வைத்து தான் விளையாடுகிறோம் என்று கூறியுள்ளார்.

    அவர் முதலில் நான் மகிழ்ச்சியாக இருப்பதாக கூற மாட்டேன் என கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் லக்னோ அணி உரிமையாளர் எப்போதுமே தன் அணி கேப்டனுடன் நல்ல உறவில் இருப்பதில்லை. ஏற்கனவே ராகுலுடனான பிரச்சனையை அவர் சந்தித்த நிலையில் தற்போது பண்ட் இடமும் அதே போல் நடந்து கொள்கிறார். இதனால் தான் பண்ட் இவ்வாறு சொல்லிவிட்டாரா என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×