என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

அஸ்வானி குமார் அசத்தல்- 116 ரன்னில் சுருண்ட கொல்கத்தா
- மும்பை அணி தரப்பில் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்சி 26 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் அஸ்வானி குமார் அறிமுகமானார்.
அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் - டிகாக் களமிறங்கினர். இதில் நரைன் 0 ரன்னிலும் டி காக் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் மும்பை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
ரகானே 11, ரகுவன்சி 23, வெங்கடேஷ் ஐயர் 3, ரிங்கு சிங் 17, மனிஷ் பாண்டே 19, ரசல் 5 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இறுதியில் கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Next Story






