search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் அபாரம்- மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 344/3
    X

    சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் அபாரம்- மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 344/3

    • மறுமுனையில் ரிஷப் பண்ட் அரை சதம் விளாசினார்.
    • இந்தியா 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

    இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

    3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து இருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    இதனை தொடர்ந்து, இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. சர்பராஸ் கான் உடன் ரிஷப் பண்ட் ஆட்டத்தை தொடங்கினார், இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அவரது முதல் சதம் இதுவாகும். மறுமுனையில் ரிஷப் பண்ட் அரை சதம் விளாசினார். ரிஷப் பண்ட் அரை சதம் விளாசினார்.

    71 ஓவர் முடிவில் 344 ரன்கள் எடுத்திருக்கும் போது மழை குறுக்கிட்ட நிலையில், சர்பராஸ் கான் 154 பந்துகளில் 125 ரன்களுடனும் ரிஷப் பண்ட் 56 பந்துகளில் 53 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அத்துடன் 4 வது நாள் உணவு இடைவேளை விடப்பட்டது.

    தற்போது வரை இந்தியா 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

    Next Story
    ×