search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கவுன்ட்டி போட்டியில் சதம்: டெஸ்ட் செலக்ஷன்- கம்பீர், அகர்கருக்கு தலைவலியை ஏற்படுத்திய சாய் சுதர்சன்
    X

    கவுன்ட்டி போட்டியில் சதம்: டெஸ்ட் செலக்ஷன்- கம்பீர், அகர்கருக்கு தலைவலியை ஏற்படுத்திய சாய் சுதர்சன்

    • கவுன்ட்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
    • காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு பறிபோனது.

    இந்திய டெஸ்ட் அணி வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வரிசையாக விளையாட இருக்கிறது. உள்ளூர் போட்டியில் விளையாடினால்தான் இந்திய சீனியர் அணியில் இடம் என்பதால் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ராவை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் துலீக் டிராபியில் விளையாடுகிறார்கள்.

    இந்திய அணிக்கு எப்போதுமே இடது கை பேட்ஸ்மேன்கள் பற்றாக்குறைதான். அதை போக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ஐபிஎல் அணியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான தரம்சாலா டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் அறிமுகம் ஆக வாய்ப்பிருந்தது. ஆனால் காயம் காரணமாக அதில் விளையாட முடியவில்லை. இடது கை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் அணியில் இடம் பிடித்தார்.

    இருந்தபோதிலும் தனது முயற்சியை சாய் சுதர்சன் கைவிடவில்லை. ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்சனின் ஆட்டம் விக்ரம் சோலங்கிற்கு (குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் டைரக்டர்) பிடித்துப் போக, இங்கிலாந்தின் கவுன்ட்டி அணியான சர்ரே அணியில் இணைய உதவி புரிந்தார். இவர் ஏற்கனவே அந்த அணியின் பயற்சியாளராக இருந்தனர்.

    சர்ரே அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்சன் நேற்று நாட்டிங்காம்ஷைர் அணிக்கெதிராக 178 பந்தில் 105 ரன்கள் விளாசினார். இதில் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடங்கும். இது அந்த அணிக்காக விளையாடும் 3-வது போட்டியாகும். ஏற்கனவே இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு இன்னிங்சில் 73 ரன்கள் அடித்துள்ளார்.

    தற்போது துலீப் டிராபியில் இந்தியா "சி" அணியில் இடம் பிடித்துள்ளார். துலீப் டிராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அது நிச்சயம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோருக்கு அணியை தேர்வு செய்வதில் பெரிய தலைவலியை ஏற்படுத்தும்.

    ஷ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், சர்பராஸ் கான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கும் ஆவலில் உள்ளனர்.

    Next Story
    ×