search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    சின்சினாட்டி ஓபன்: 2வது சுற்றில் இத்தாலி வீரர் அதிர்ச்சி தோல்வி
    X

    சின்சினாட்டி ஓபன்: 2வது சுற்றில் இத்தாலி வீரர் அதிர்ச்சி தோல்வி

    • அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலி வீரர் முசெட்டி 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முதல் சுற்று போட்டிகள் முடிந்து தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், இன்று நடந்த 2வது சுற்றில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபோ உடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் தியாபோ 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இத்தாலி வீரர் முசெட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.

    கடந்த மாதம் நடைபெற்ற குரோசியா ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முசெட்டி தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×