search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை புறக்கணிக்கப்படுகிறதா? ஒரே வரியில் பதில் அளித்த கனிமொழி எம்.பி.
    X

    கோவை புறக்கணிக்கப்படுகிறதா? ஒரே வரியில் பதில் அளித்த கனிமொழி எம்.பி.

    • கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.
    • கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி அறிக்கை தயாரிக்கும் குழுவின் ஆலோசனை கூட்டம் கோவையில் இன்று (பிப்ரவரி 10) நடைபெற்றது. இந்த கூட்டம், அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

    ஆலோசனை கூட்டத்தில் கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில்துறையினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "கோவை மட்டுமல்ல, தமிழகம் முழுக்க சிறு, குறு தொழில் செய்பவர்கள் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. மற்றும் கொரோனா உள்ளிட்டவைகளால் பெரிய பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர். ஜி.எஸ்.டி.-யில் நிறைய சிக்கல்கள் உள்ளன. அதை கட்ட முடியாமல் சிறு, குறு தொழில் செய்வோர் தங்களது தொழிலை செய்ய முடியாத சூழலில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்."

    "கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மின் கட்டண உயர்வு தொடர்பாக பலமுறை தொழில்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும்," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×