search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்- நீதிமன்றம் உத்தரவு
    X

    சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்- நீதிமன்றம் உத்தரவு

    • சவுக்கு சங்கர் கைதாகி கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • சவுக்குசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைதாகி கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சவுக்குசங்கர் மீது சென்னையில் அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நேற்று சவுக்குசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை கோவை ஜெயிலில் இருந்த சவுக்கு சங்கரிடம் சென்னை போலீசார் வழங்கினர்.

    இந்நிலையில், யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    நாளை மாலை 5 மணி வரை சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சைப் கிரைம் போலீசர் மனு அளித்து இருந்தனர்.

    இந்நிலையில், வழக்கை விசாரித்த கோவை 4வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு ஒரு நாள் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×