என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிறுமி பாலியல் வன்கொடுமை- கிருஷ்ணகிரி விரையும் ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான ஆய்வு குழு
    X

    சிறுமி பாலியல் வன்கொடுமை- கிருஷ்ணகிரி விரையும் ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான ஆய்வு குழு

    • போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவராமன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.
    • பாலியன் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, இன்று இரவு கிருஷ்ணகிரிக்கு குழு செல்கிறது.


    ------------

    நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு என்.சி.சி. முகாம் பயிற்சி அளித்து வந்துள்ளார்.

    அப்போது சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவராமன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையிலான குழு விரைகிறது.

    அதன்படி, இன்று இரவு கிருஷ்ணகிரிக்கு குழு செல்கிறது. இந்த குழு நாளை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்துகிறது.

    2 நாட்கள் அங்கேயே முகாமிட்டு விசாரணை நடத்த உள்ளனர்.

    15 நாளில் பரிந்துரை அறிக்கை அளிக்க முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×