search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஆழ்கடலில் தத்தளித்த 12 மீனவர்கள் விரைவில் இந்தியா வருகை- விஜய் வசந்த் எம்.பி.
    X

    ஆழ்கடலில் தத்தளித்த 12 மீனவர்கள் விரைவில் இந்தியா வருகை- விஜய் வசந்த் எம்.பி.

    • பூத்துறையை சேர்ந்த மீனவர் ஒருவர் என 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    • விசைப்படகில் எந்திர கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் தொழில் செய்து வருகின்றனர். இரவிபுத்தன் துறை பகுதியை சேர்ந்த அருளப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 11-ந்தேதி கொச்சி துறைமுகத்திலிருந்து அருளப்பன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த 2 மீனவர்கள், மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 மீனவர்கள், பூத்துறையை சேர்ந்த மீனவர் ஒருவர் என 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இவர்கள் கடந்த 15-ந்தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்களது விசைப்படகில் எந்திர கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது. இதனால், ஆழ்கடலில் இவர்கள் தத்தளித்தனர்.


    இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூகவலைதளத்தில் கூயிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தின் 4 மீனவர்கள் உட்பட 12 இந்திய மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள் படகு பழுதடைந்து, கட்டுபாட்டை இழந்த படகு ஓமன் நாட்டு கடல் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் கடலில் தத்தளிப்பதை அறிந்து, வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் ஓமன் தூதரகத்தை தொடர்ப்பு கொண்டு அவர்களை பத்திரமாக மீட்க கோரிக்கை வைத்தேன்.

    அதன்படி அவர்கள் மீட்கப்பட்டு இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை உதவியுடன் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அக்டோபர் முதல் நாள் இந்த 12 மீனவர்களும் அவர்களது விசை படகும் இந்தியா வந்தடையும் என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவித்து கொள்கிறேன்.

    Next Story
    ×