search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது
    X

    பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது

    • இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
    • இளைஞர்கள் பயன்படுத்திய போதை ஊசிகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்கரை பகுதியில் இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து அதிரடியாக சோதனை மேற்கொண்ட போலீசார் இளைஞர்கள் 8 பேரை கைது செய்தனர்.

    மேலும், இளைஞர்கள் பயன்படுத்திய போதை ஊசிகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், பல்லம் பகுதியை சேர்ந்த முரளி குமார் என்பவரிடம் போதை மருத்து நிரப்பப்பட்ட குப்பிகளை வாங்கியது தெரியவந்துள்ளது.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×