என் மலர்tooltip icon

    உலகம்

    மனைவியின் சாம்பலில் மண்பானை செய்த கணவர்
    X

    மனைவியின் சாம்பலில் மண்பானை செய்த கணவர்

    • நான் இறந்த பிறகு என்னை மனைவியின் உடல் அருகே அடக்கம் செய்யலாம்.
    • நாங்கள் சொர்க்கத்தில் என்றென்றும் ஒன்றாக இருப்போம் என்றார்.

    சீனாவின் ஷான்டாங் மாகாணத்தை சேர்ந்தவர் பியாவோ ஷூடாங். இவரது மனைவி லாங்ஐகுன. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த லாங்ஐகுன் கடந்த 2023-ம் ஆண்டு உயிரிழந்தார்.

    மனைவியின் மீது தீராக்காதல் கொண்டிருந்த பியாவோ தனது மனைவியின் சாம்பலை கொண்டு களிமண்ணில் பானை செய்து பாதுகாத்து வருகிறார்.

    இதுகுறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் பியோவோ கூறுகையில், இந்த கலசம் என்னுடையது. நான் இறந்த பிறகு என்னை மனைவியின் உடல் அருகே அடக்கம் செய்யலாம். நாங்கள் சொர்க்கத்தில் என்றென்றும் ஒன்றாக இருப்போம் என்றார்.

    Next Story
    ×