என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணாமலை"

    • பேசவேமாட்டேன் என்றால் அது என்ன அரசியல்?
    • கட்சியில் சேர்ந்ததிற்காக சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிக்கிறவன் கிடையாது

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் வாய் திறக்காதது குறித்து பேசியிருந்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை,

    "கம்முனு இருக்கவேண்டிய இடத்தில் கம்முனு இருக்கணும். கும்முனு இருக்கவேண்டிய இடத்தில் கும்முனு இருக்கணும். இது விஜய் கூறியது. அரசியலில் அப்படி இருக்க முடியுமா? எப்படி இருந்தாலும் பேசவேண்டிய இடத்தில் பேசினால் நல்ல அரசியல்வாதியாக வருவார். இவ்வளவு பிரச்சனைகள் நடக்கும்போது நான் வேடிக்கை மட்டும் பார்ப்பேன் என்றால், உங்களை(விஜய்யை) நம்பி எப்படி மக்கள் ஆட்சிப் பொறுப்பை கொடுப்பார்கள்? தவறு என்றால் தவறு எனக்கூறவேண்டும். சரி என்றால் சரி எனக்கூறவேண்டும். பேசவேமாட்டேன் என்றால் அது என்ன அரசியல்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

    அண்ணாமலையின் இந்த விமர்சனத்திற்கு பதிலளித்த தவெக நிர்வாகி அருண்ராஜ், "அவர் கம்முனு இருக்க வேண்டிய இடத்தில் கம்முனு இருந்திருந்தால் அவர் இருந்திருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்து இருப்பார்" என்று கூறினார். 

    இந்நிலையில் அருண்ராஜ் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள அண்ணாமலை, "இந்த அண்ணாமலை என்கின்ற நாயின் வாலை நிமிர்த்தமுடியாது. இந்த வால் அப்படித்தான் இருக்கும். ஏனெனில் இது உண்மையை பேசுகின்ற நாய். இது ஜால்ரா அடிக்கும் நாய் கிடையாது. கட்சியில் சேர்ந்ததிற்காக சினிமா நடிகருக்கு ஜால்ரா அடிக்கிற நாய் இல்லை. இந்த நாயின் வால் வளைந்துதான் இருக்கும். இந்த நாய் அப்படித்தான் பேசும். அதற்காக எது வந்தாலும் அது ஏற்றுக்கொள்ளும். மோடியின் நன்றியுள்ள நாய் இது.

    சினிமா நடிகர்களுக்கு ஜால்ரா அடிப்பதற்காக நான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரவில்லை. நான் ஒரு உன்னதமாக கோட்பாட்டிற்காக வந்துள்ளேன். இந்த வால் இப்படித்தான், நெலிந்து வளைந்துதான் இருக்கும். வருகின்ற காலத்திலும் பல பிரச்சனைகளை சந்திக்கத்தான் போகிறேன். ஆனால் மக்களுக்காகத்தான் அதனை சந்திக்கிறேன். அதனை பெருமையாகத்தான் எடுத்துக்கொள்கிறேன். ஜால்ரா அடித்துதான் பதவியில் இருக்கவேண்டும் என்றால் அந்தப் பதவி எனக்கு தேவையில்லை. அது என் மயிறிழைக்கு சமம்" என தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. ஒருபோதும் விளம்பரத்திற்கான அரசாங்கம் இல்லை.
    • பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ சிந்தாமணியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கல்வியில் சிறந்த மாநிலம் தமிழகம் என தமிழக முதலமைச்சர் கூறியது தரவுகள் அடிப்படையிலேயே தான். தற்போது அது உண்மை என நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் முதலமைச்சர் கூறுவது மாய பிம்பம் என அண்ணாமலை கூறியுள்ளார்.

    தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது, அது உண்மையில்லை. தமிழகத்தில் ஆரம்ப கல்வியில் இடைநிற்றல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய அளவில் உயர்நிலை, மேல்நிலைக் கல்வியில் இடைநிற்றல் 14 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 7.7 சதவீதமாகவே உள்ளது.

    இதில் மாணவர்கள் பலர் பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு ஐ.டி.ஐ. போன்ற படிப்புகளில் சேருகின்றனர். எனவே இடைநிற்றல் சதவீத கணக்கில் வருகிறது. மேலும் இந்த சதவீதமும் குறையும். தி.மு.க. ஒருபோதும் விளம்பரத்திற்கான அரசாங்கம் இல்லை.

    திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது வேதனைக்குரிய செய்தி. இந்த துயர செய்தி குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டாலும் போன உயிர் திரும்ப வராது. மாணவர் தரப்பில் வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். இறந்த மாணவனின் சகோதரருக்கு கல்வி சார்ந்த உதவிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 

    • சுமார் நாற்பதாண்டுகளாக, தமிழக அரசியலில் முக்கியமான இடம் பெற்றவர்.
    • அரசியல் வியூகங்களில் சிறந்தவராகத் திகழ்பவர்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், அன்பு அண்ணன் டி.டி.வி.தினகரன் அவர்களுக்கு, இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சுமார் நாற்பதாண்டுகளாக, தமிழக அரசியலில் முக்கியமான இடம் பெற்றவர். மக்கள் பணிகளில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். அரசியல் வியூகங்களில் சிறந்தவராகத் திகழ்பவர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் அவரது வலதுகரமாகத் திகழ்ந்தவர்.

    அண்ணன் டி.டி.வி. தினகரன் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து தனது அரசியல் பணிகளிலும், சமூகப் பணிகளிலும் சிறந்து விளங்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

    • தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
    • சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதப் போகிறேன் என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் நாடகம் வேறு.

    அரசு பள்ளிகளில் போதிய கட்டிடங்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து படிக்கும் நிலை உருவாகியுள்ளதாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 1,000 மாணவ மாணவியருக்கு மேல் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிகளுக்குப் போதிய கட்டிடங்கள் இல்லாததால், மாணவ, மாணவியர், மைதானத்தில் தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

    பெற்றோர்களின் கடின உழைப்பில், மாணவர்கள் படித்து சாதனை செய்வதில் எல்லாம், தங்கள் ஆட்சியின் ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, உண்மையில் அரசுப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லை என்பதை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலையைப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

    ஆட்சிக்கு வந்த உடன், 10,000 பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுப்போம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்த திமுக, ஆட்சி முடியப் போகும் தருணத்திலும் கூட, எந்த மாவட்டத்தில் எத்தனை பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டியுள்ளார்கள் என்பதைக் கூற மறுத்து வருகிறார்கள். இந்த அழகில், சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் எழுதப் போகிறேன் என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் நாடகம் வேறு.

    "Out of Contact" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் முக்கியமா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஏப்ரல் மாதம் தனது பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகினார்.
    • அண்ணாமலைக்கு பிறகு நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.

    கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் அண்ணாமலை. இவர் பா.ஜ.க. மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக அக்கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார்.

    இதனால் பா.ஜ.க. தமிழக மாநில துணைத்தலைவராக 2020-ம் ஆண்டு பதவியேற்றார். அதனை தொடர்ந்து 2021-ம் ஆண்டு தலைவராக பதவியேற்றார். இதன் பிறகு தமிழக பா.ஜ.க. அரசியல் களத்தில் மும்முரமாக செயல்பட்டு வந்தது. இருப்பினும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை சந்தித்தது. இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இடம்பெறாததே காரணம். அதற்கு அண்ணாமலையே காரணம் என ஒரு சாரார் குற்றம்சாட்டினர்.

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு பல திடுக்கிடும் சம்பவங்களை செய்து அண்ணாமலை பேசும்பொருளானார். அதில் ஒன்று, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் கூறி, தமிழக அரசை கண்டித்து அண்ணாமலை ஒரு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தனக்குத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டம், தமிழக அரசியல் களத்தில் முதல்முறை எனக் கூறப்படும் ஒரு நூதன முறையாக இருந்ததுடன், பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

     

    மேலும், தி.மு.க. ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை காலணி அணியாமல் வெறும் காலுடன் நடப்பேன் என்று சபதம் எடுத்த அண்ணாமலை சில மாதங்கள் செருப்பு அணியாமல் நடந்து வந்தார். இதன்பின் ஏப்ரல் 12-ந்தேதி அன்று தனது சபதத்தை முடித்துக்கொண்டு மீண்டும் காலணி அணியத் தொடங்கினார்.

    இதனிடையே, பாராளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியை போல் சட்டமன்ற தேர்தலிலும் தோல்வி ஏற்படக்கூடாது என்று கருதிய டெல்லி மேலிடம் அ.தி.மு.க.வை அணுகியது. அதற்கு அ.தி.மு.க. தரப்பில் தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நீடிக்கும் வரை கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து, ஏப்ரல் மாதம் தனது பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகினார். அண்ணாமலைக்கு பிறகு நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவராக பணியாற்றி வருகிறார்.

    இதற்கிடையே, அண்ணாமலை பதவியில் இருந்து விலகியதற்கு எடப்பாடி பழனிசாமி போட்ட கண்டிஷன் மட்டுமே காரணம் இல்லை என்று கூறப்படுகிறது. அதற்கு வேறொரு காரணம் சொல்லப்படுகிறது.

     

    அதாவது, கோயம்புத்தூரில் அண்ணாமலை வாங்கிய நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் என்றும், அது சட்டவிரோதமாக வாங்கப்பட்டதாகவும், மாதத்திற்கு ரூ. 6 லட்சம் வாடகை செலுத்தி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், இவ்வளவு பெரிய தொகைக்கு நிலத்தை வாங்குவதற்கு நிதி எப்படி வந்தது என பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

    இதற்கு அண்ணாமலை தரப்பில், ஜூலை 12, 2025 அன்று விவசாய நிலம் வாங்கியது உண்மைதான். அனைத்து நடைமுறைகளும் சட்டப்பூர்வமாகப் பின்பற்றப்பட்டன. நிலத்தை வாங்கத் தனது மற்றும் தனது மனைவியின் சேமிப்பு மற்றும் வங்கிக் கடன் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

    நிலப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வைக்காக ரூ. 40.59 லட்சம் மாநில அரசுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. இயற்கை விவசாயம் மற்றும் பால் பண்ணை அமைப்பதற்காகவே நிலம் வாங்கப்பட்டது என்றும், இதற்காக பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடனுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதுவே தான் வாங்கிய முதல் அசையா சொத்து என்றும், அடுத்த ஆண்டு வருமான வரி அறிக்கையில் அனைத்து விவரங்களும் தெரியவரும் என்றார்.

     

    முன்னதாக, அண்ணாமலை பா.ஜ.க. மாநில தலைவராக பதவி வகித்த போது ஆளும் கட்சிக்கு எதிரான கண்டனங்களையும், போராட்டங்களையும் தீவிரமாக முன்னெடுத்து வந்தார். மேலும், பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் புதிய பா.ஜ.க. தலைவரான நயினார் நாகேந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால் சில மாதங்கள் ஆக்டிவாக இல்லாமல் இருந்த அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை அண்ணாமலை பா.ஜ.க.வில் தான் நீடிக்கிறார். ஆனால் 2026-ம் ஆண்டிலும் அண்ணாமலை பா.ஜ.க.வில் தான் இருப்பாரா? அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுமா? இல்லை அதிருப்தியில் தனிக்கட்சி தொடங்குவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • தீபத்தூண் என்பது கோவில் சொத்து என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
    • இதுதொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மத மோதலில் ஏற்படுத்தும் முயற்சியில் தி.மு.க. அரசு இறங்கியுள்ளது.

    ஐகோர்ட் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு குறித்து தமிழக அமைச்சர் ரகுபதி வேண்டும் என்றே பொய் சொல்லியுள்ளார். நீதிபதி தவறான தீர்ப்பு கொடுத்துள்ளார் என ரகுபதி தவறான வாதத்தைவைக்கிறார்.

    தீபத்தூண் என்பது கோவில் சொத்து என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. இதனை எதிர்த்து செயல் அலுவலர் ஏன் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதுவும் சரியாக செய்யவில்லை. செயல் அலுவலரை திமுக அரசு தூண்டிவிட்டு மேல்முறையீடு செய்ய வைத்துள்ளது.

    திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மோசடி என நீதிபதிகள் அமர்வு கண்டுபிடித்தனர். திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்ற உத்தரவில் எந்த தவறும் இல்லை.

    நீதிபதி தீர்ப்புக்கு எதிராக சட்டவிரோதமாக மோதல் போக்கை தி.மு.க. அரசு கடைபிடித்துள்ளது. ஒரு தலைபட்சமாக இந்து மதத்தை நம்பும் பக்தர்களுக்கு எதிராக உச்சபட்சமாக திருப்திப்படுத்தும் அரசியலை தி.மு.க. செய்கிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய சட்டத்துறை அமைச்சர் பழைய தீர்ப்புகளை திரித்து பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
    • ஜெயலலிதா அவர்களின் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவுத:-

    தமிழக முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் நினைவு தினம் இன்று.

    சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். தமிழக மக்கள் நலனுக்காகவும், சமூக நலனுக்காகவும், எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவர்தம் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு, இந்த சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது.
    • இந்த வழக்கில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை?

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையின் மேற்பகுதியில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

    நேற்றைய தினம் திமுக அரசு, உயர்நீதிமன்ற உத்தரவையும், முருகப் பெருமான் பக்தர்களின் நம்பிக்கையையும் வெளிப்படையாக மீறி, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் ஆபத்தை உருவாக்கியிருக்கும் நிலையில் இன்று இந்த தீர்ப்பு வந்துள்ளது.

    பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு, இந்த சூழ்நிலையைத் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது. கடந்த டிசம்பர் 2-ம் தேதி அன்றே இந்து சமய அறநிலையத் துறையை முறைகேடாகப் பயன்படுத்தி, அவசரமாக மேல்முறையீடு செய்ய வைத்தும், பின்னர் அவ்வழக்கில் அலட்சியம் காட்டி, காலம் தாழ்த்தியும் வந்த திமுக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பிறகே பதிலளிக்க முன்வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி, பக்தர்களின் பாதுகாப்புக்காக உயர்நீதிமன்றம் நியமித்த CISF, மற்றும் மாநில காவல்துறை இடையே தேவையற்ற மோதலை உருவாக்கி, இறுதியில் 144 தடையுத்தரவையும் பிறப்பித்தது திமுக அரசு.

    இந்த வழக்கில் தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை?

    நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு அளிக்க வேண்டிய தேவை இருப்பது, அது தர்கா நிர்வாகம் மட்டுமே. ஆனால் அவர்கள் மேல்முறையீடு செய்யவில்லை. ஏனெனில் சிக்கந்தர் தர்கா அருகிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது குறித்த வரலாறும், இருதரப்பு ஒப்பந்தமும் இருப்பதை தர்கா நிர்வாகிகள் நன்கு அறிவார்கள்.

    தமிழக மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தும் தங்கள் அநாகரிக அரசியல் நாடகங்களை திமுக எப்போது நிறுத்தப் போகிறது?

    திமுக அரசு குறைந்தபட்சம் இனியாவது உயர்நீதிமன்ற உத்தரவை மதிப்பார்களா அல்லது தங்கள் வழக்கமான பிரிவினை நாடகங்களைத் தொடரப் போகிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • தடுப்புகளை தூக்கி எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் ஒருவர் காயமும் அடைந்துள்ளார்.
    • இந்தச் செயல் நமது மக்களின் நம்பிக்கையின் மையத்தையே தாக்குகிறது.

    கார்த்திகை தீபத் திருவிழாவில் மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்கப்படி உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று தீபம் ஏற்றப்பட்டது.

    ஆனால் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    ஆனால் உத்தரவுப்படி தக்ரா அருகே ஏற்றாமல் எப்போதும்போல உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.

    இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் போலீசார் மலை ஏற அனுமதி மறுக்கவே சிஐஎஸ்எஃப் வீரர்கள் திரும்பிச் சென்றனர்.

    இதனிடையே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மலையேற முயற்சித்து போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தள்ளுமுள்ளலில் ஈடுபட்டனர். மேலும் தடுப்புகளை தூக்கி எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் ஒருவர் காயமும் அடைந்துள்ளார்.

    இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக அரசின் சனாதன தர்மத்தின் மீதான விரோதம் வெளிப்பட்டுள்ளது.

    இந்து பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை, திருப்பரங்குன்றம் மலையில் புனித கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்தச் செயல் நமது மக்களின் நம்பிக்கையின் மையத்தையே தாக்குகிறது.

    இன்று, நூற்றுக்கணக்கான காவல்துறையினரை குவித்து, பக்தர்கள் மதச் சடங்குகளைச் செய்வதைத் தடுத்து நிறுத்துவதன் மூலம், திமுக ஆட்சி அதன் திருப்திப்படுத்தும் அரசியலின் முழு அளவையும் அம்பலப்படுத்தியுள்ளது.

    சனாதன தர்மம் ஏன் மீண்டும் மீண்டும் தனிமைப்படுத்தப்படுகிறது என்பதற்கு திமுக பதிலளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகள் இந்த அரசுக்கு எந்த அர்த்தமும் இல்லையா?" என்று தெரிவித்துள்ளார். 

    • யார் எந்த கட்சிக்கு சென்றாலும் 2026-ல் கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும்.
    • தமிழ்நாட்டில் கூட்டணியை பொறுத்துதான் ஆட்சி அமையும் என எப்போதும் சொல்லமுடியாது.

    மதுரையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், 

    "பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக ஆட்சி அமைக்கவில்லை என்பது உண்மைக்கு புறம்பானது. இந்த கூற்று ஏற்றுகொள்ள முடியாதது. தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அல்ல, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைய வேண்டும் என்றுதான் அமித்ஷா கூறியுள்ளார்.

    அதிமுகவின் உட்கட்சி பூசல் என்பது வெறும் கண்துடைப்பு. தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னார்கள், அதை நிறைவேற்றினார்களா? என்பதைத்தான் பார்க்கவேண்டும். திமுக வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா? எல்லா இடங்களிலும் போதைப்பொருள். இதையெல்லாம் தாண்டி மக்கள் ஓட்டுப் போடுவார்களா?

    யார் எந்த கட்சிக்கு சென்றாலும் 2026-ல் கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும். மக்கள் மனதில் மாற்றம் வந்துள்ளது. பீகார் போல இங்கும் மாற்றம் நிகழும். திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் அனைத்தும் எங்களுக்குதான் வரும். தமிழ்நாட்டில் கூட்டணியை பொறுத்துதான் ஆட்சி அமையும் என எப்போதும் சொல்லமுடியாது. எண்பது வரலாறுகளில் கூட்டணி இல்லாமல் எம்ஜிஆர் எவ்வாறு வெற்றிப்பெற்றார்? அண்ணாமலை எங்கள் கட்சியில் இருந்தவர்.

    கட்சியின் மாநிலத்தலைவராக இருந்தவர். அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கமாட்டார். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் எடப்பாடி தலைமையில் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். கலவரத்தை தூண்டக்கூடிய கதாநாயகனாக சு.வெங்கடேசன் இருப்பார் என சந்தேகமாக இருக்கிறது. அப்படி கலவரம் நிகழ்ந்தால் சு. வெங்கடேசன்தான் பொறுப்பு. தீபம் ஏற்றுவதில் சு. வெங்கடேசனுக்கோ, அவரது குடும்பத்திற்கோ, அவர்சார்ந்த கட்சிக்கோ எதாவது பிரச்சனை இருக்கிறதா?" என தெரிவித்தார். 

    • இந்த மாநிலத்தில் தீவிரவாதமும் இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இல்லை.
    • பா.ஜ.க. நிர்வாகிகளின் நிறுவனங்கள் மீது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குண்டர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதை அவர் மறந்துவிட்டாரா?

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பாதுகாப்பற்ற மாநிலம் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து கூறி வருகிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு தீவிரவாதி ஆளுநர் தான்.

    இந்த மாநிலத்தில் தீவிரவாதமும் இல்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இல்லை. தீவிரவாதம் வந்துவிடாதா என்று விரும்புகிறார் ஆளுநர் என்று கூறினார்.

    இதுதொடர்பாக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தி.மு.க. அரசின் கீழ் தீவிரவாதம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டியதற்காக, தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவி "தீவிரவாதி" என்று அழைக்கும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார்.

    2022-ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த கொடூரமான தற்கொலை குண்டுவெடிப்பை அப்பாவு மறந்துவிட்டாரா?

    பா.ஜ.க. அலுவலகங்கள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளின் நிறுவனங்கள் மீது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குண்டர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதை அவர் மறந்துவிட்டாரா?

    கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றிய தீவிரவாத அமைப்புகளின் மீதான ஒடுக்குமுறை குறித்து தேசிய புலனாய்வு முகமை (NIA) வெளியிட்ட செய்திகளை அவர் எப்போதாவது சரிபார்த்தாரா?

    எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கம் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யத் தவறியதால் தமிழக மக்கள் தொடர்ந்து துன்பப்பட்டு வரும் வேளையில், 1998 கோவை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பாஷாவுக்கு, அதிர்ச்சியூட்டும் வகையில் தியாகியைப் போன்ற பிரியாவிடை அளிக்கப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முழுமையாக வழங்கப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டிடிவி தினகரன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்து வருகிறார்.
    • அண்ணாமலையின் கூட்டணி கோரிக்கையை டிடிவி தினகரன் நிராகரித்தார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன் தொடர்ச்சியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்து வருகிறார்.

    இதனிடையே, டிடிவி தினகரன் உடன் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அண்ணாமலையின் கோரிக்கையை டிடிவி தினகரன் நிராகரித்தார்.

    இந்நிலையில், கரூரில் திருமண விழா ஒன்றில் டிடிவி தினகரன் மற்றும் அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "மரியாதை நிமித்தமாக சந்தித்து நலம் விசாரித்தோம்; கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை" என்று தெரிவித்தார். 

    ×