search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 teenagers arrested"

    • ஊத்துமலை பகுதியில் சில வாலிபர்கள் வாக்கி டாக்கி மூலம் பேசிக் கொண்டிருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்தது.
    • அவர்களிடம் இருந்த வாக்கி டாக்கிகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை பகுதியில் சில வாலிபர்கள் வாக்கி டாக்கி மூலம் பேசிக் கொண்டிருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்தது.

    இதைத் தொடர்ந்து இன்று காலை சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு பதுங்கி இருந்த 3 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்த வாக்கி டாக்கிகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் சேலம் தாதகாப்பட்டி சண்முக நகர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த கேசவன்(35), அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த வில்வேஸ்வரன் (22), தாதகாப்பட்டி ஸ்ரீரங்கம் தெருவை சேர்ந்த நாகராஜன் (20) என்பது தெரியவந்தது.

    இவர்கள் போலீசார் மற்றும் ஆட்கள் நடமாட்டத்தை நோட்டமிட்டு வாக்கி டாக்கி மூலம் தகவல்களை பரிமாறி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் வாலிபர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் நடவடிக்கை
    • ஜெயிலில் அடைப்பு

    வேலூர்:

    வேலூர் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் என்கிற ரெட் (வயது 23). இவர் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் வடக்கு போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல சைதாப்பேட்டையை சேர்ந்த ரகுவரன் (23) விரிஞ்சிபுரத்தை சேர்ந்த சரண்ராஜ் (28) ஆகியோர் குற்ற செயலில் ஈடுபட்டதாக விரிஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார்.

    அதன் அடிப்படையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் 3 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து ராம்குமார், ரகுவரன், சரண்ராஜ் 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • திரு.பட்டினம் பட்டினச்சேரி ரயில் பாதை அருகே, சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக திரு. பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
    • அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்,

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூர் காலனி புதுதெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பிரேமகுமாரி (வயது 54). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் பருகம்பட்டு கிராமத்தில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பிரேமகுமாரியின் வீட்டின் கேட்டை உடைப்பது போல் சத்தம்கேட்டது. அக்கம் பக்கதினர் வெளியே வந்து பார்த்தபோது 2 வாலிபர்கள் கையில் இரும்பு பைப்புகளுடன் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 2 வாலிப ர்களையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

    வீட்டின் உரிமையாளர் பிரேமகுமாரிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பிரேமகுமாரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு மட்டும் உடைத்திருந்ததுஇ.தற்கிடையில் பொதுமக்கள் திருவெண்ணை நல்லூர்போலீசாருக்கு தகவல் தெரிவி த்தனர். அதன்பேரில் திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொது மக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். திருவெண்ணை நல்லூர் காந்திகுப்பம் காலனியை சேர்ந்த கலியன் மகன் ஜெகதீஸ்வரன் (21), சரவணம்பாக்கம் காலனியை சேர்ந்த ரகு மகன் உதயா (26) என தெரியவந்தது. மேலும் 2 பேரும் வீட்டின் பூட்டை உடைத்து திருடமுயற்சி செய்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர்இதையடுத்து அவர்களி டமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரோந்து பணியின்போது சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதி களில் சட்ட விரோத செயல்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து தடுக்கும் பணியில் அரக்கோ ணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா தலைமையிலான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அவர் கள் நேற்று மோசூர், செய்யூர் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது செய்யூர் கல்குவாரி அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசா ரித்தனர்.

    அதில் அவர்கள் அரக்கோணத்தை அடுத்த மோசூர் பகுதியை சேர்ந்த காமேஷ் (வயது 23), செய்யூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் (23) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்தது. தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    அதேபோன்று தக்கோலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் தக்கோலம், அனந்தாபுரம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அனந்தாபுரம் ஆற்று பாலம் அருகே நின்றிருந்த வாலிபர் ஒருவர் போலீசார் வருவதை கண்டதும் தப்பி ஓடினார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் தக்கோலம் பகுதியை சேர்ந்த மணி கண்டன் (22) என்பதும்.

    கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்து, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சந்தோசை வழிமறித்து கத்திமுனையில் அவரிடமிருந்த 700 மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
    • சந்தோஷ் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி காசி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 22). லாரி டிரைவரான இவர் நேற்று அம்மாபேட்டை ஜங்சன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சந்தோசை வழிமறித்து கத்திமுனையில் அவரிடமிருந்த .700 மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து சந்தோஷ் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சேலம் எருமாபாளையம் நேதாஜி தெருவைச் சேர்ந்த கதிர்வேல் (20), கிச்சிபாளையம் சுண்ணாம்பு சூலை பகுதியைச் சேர்ந்த நடராஜ் (20) மற்றும் மதன் குமார் (வயது 18) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம், செல்போன் மற்றும் கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×