search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional Financial Concession"

    • ஆந்திர மாநில திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை.
    • ஆந்திராவிக்ரு ரூ.60,000 - 70,000 கோடி அளவிற்கு முதலீடுகள் வரும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வரும் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.

    இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக சொல்லப்பட்டது.

    ஆந்திராவில் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் ஆலை அமைப்பது தொடர்பாக எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார்.

    அதன்படி, ஆந்திராவில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

    இந்த தொழிற்சாலையின் மூலம் ஆந்திராவிற்கு ரூ.60,000 - 70,000 கோடி அளவிற்கு முதலீடுகள் வரும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

    ஸ்ரீகாகுளம், மச்சிலிப்பட்டினம் மற்றும் ராமயப்பட்டினம் ஆகிய 3 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த ஆலை அமைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

    நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்து மோடி 3 ஆவது முறையாக பிரதமராகினார். ஆதலால் சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    • மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
    • 3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.

    2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

    வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வரும் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.

    இந்நிலையில், நடப்பு பட்ஜெட்டில் பீகார் மாநில திட்டங்களுக்காக ரூ.30,000 கோடியை ஒதுக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். அப்போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    இதற்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி கேட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்து மோடி 3 ஆவது முறையாக பிரதமராகினார். ஆதலால் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

    • ஆந்திர மாநில வளர்ச்சிக்கு அதிக அளவில் நிதி உதவி வழங்க வேண்டும்.
    • கோரிக்கைகளை கட்டாயம் மத்திய அரசு நிறைவேற்றி தர வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

    திருப்பதி:

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று பிரதமர் மோடியை 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.

    அப்போது சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியிடம் 7 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதில் ஆந்திர மாநில வளர்ச்சிக்கு அதிக அளவில் நிதி உதவி வழங்க வேண்டும்.

    போல வரம் திட்ட கட்டுமானத்திற்கும், தலைநகர் அமராவதியில் அரசு வளாகங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு விரிவான நிதி உதவி வழங்க வேண்டும். தொழில் வளர்ச்சிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

    சாலைகள், பாலங்கள் போன்ற அரசு அவசர துறைகளை கருத்தில் கொண்டு மூலதன செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்ற சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.

    துகராஜப்பட்டினம் துறைமுகம் போன்ற பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்தார்.

    இந்த கோரிக்கைகளை கட்டாயம் மத்திய அரசு நிறைவேற்றி தர வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

    பின்னர் மத்திய மந்திரிகள் நித்தின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், அமித் ஷா, பியூஸ் கோயல் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்து பேசினார்.

    இன்று மாலை டெல்லியில் இருந்து சந்திரபாபு நாயுடு ஆந்திரா திரும்புகிறார்.

    • கோரிக்கைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது.
    • சந்திரபாபு நாயுடு பா.ஜ.க கூட்டணியில் சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் அமராவதியை தலைநகராக்கும் திட்டத்தை சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார். தற்போது ஆந்திர மாநிலம் நிதிச்சுமையால் திண்டாடி வருகிறது.

    இந்த நிலையில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி சென்றார். அவர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. ஆந்திரா தொடர்பான பல முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.

     போலாவரம், அமராவதி தலைநகர் கட்டமைப்பு பணி குறித்து சந்திரபாபு நாயுடு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். மேலும் ஆந்திராவுக்கு வரிச் சலுகை கூடுதல் நிதி தேவை என சந்திரபாபு நாயுடு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயலை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், அமித் ஷா ஆகியோரை இன்று சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார்.

    நாளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார்.

    ஆந்திர மாநிலத்தில் நிலுவையில் உள்ள போலவரம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்கள், அமராவதி தலைநகர் திட்டம், மாநில நெடுஞ்சாலைகள், சாலைகள் உள்ளிட்ட உள் கட்டமைப்புகளின் நிலை குறித்து டெல்லி செல்வதற்கு முன்பாக அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து அறிக்கை ஒன்றை சந்திரபாபு நாயுடு தயார் செய்தார்.

    மேலும் ஆந்திர மாநிலத்திற்கு தேவையான நிதி குறித்தும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த நீண்ட பட்டியலுடன் அவர் டெல்லியில் சந்திரபாபு நாயுடு முகாமிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி மற்றும் மத்திய மத்திரிகளுடன் சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ,ஆந்திர மாநிலத்திற்கு கூடுதல் நிதி சலுகைகள் மற்றும் வரி சலுகைகளை சந்திரபாபு நாயுடு கேட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

    அரசியல் அனுபவம் வாய்ந்த சந்திரபாபு நாயுடு தற்போது பா.ஜ.க கூட்டணியில் சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார்.

    இந்த சந்தர்ப்பத்தை அவர் ஒருபோதும் நழுவ விட மாட்டார். ஆந்திராவிற்கான அனைத்து திட்டங்களையும் கேட்டு பெறுவதில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

    மேலும் பல தொழில் நிறுவனங்களையும் ஆந்திராவுக்கு கொண்டு செல்வதில் கில்லாடியாக செயல்படுவார்.

    அவருடைய கோரிக்கைகளை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    சந்திரபாபு நாயுடு முகாமிட்டிருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    ×