search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bathing Wild Elephant"

    • தேயிலை தோட்டங்களில் யானைகள் கூட்டம் சுற்றி திரிந்தது.
    • தண்ணீருக்குள் படுத்து ஆனந்த குளியல் போட்டு, நீந்தி மகிழ்ந்தது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் எண்ணற்ற தேயிலை தோட்டங்களும், இயற்கை காடுகளும் நிறைந்து காணப்படுகிறது.

    இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் தேயிலை தோட்டங்கள், இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பதற்கு என்று நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    சுற்றுலா பயணிகளின் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் வால்பாறை இருந்து வருகிறது. அவர்கள் தேயிலை தோட்டங்களை கண்டு ரசித்து, கூழாங்கல் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

    வால்பாறையில் உள்ள வனப்பகுதிகளில், காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து, அங்குள்ள தண்ணீர் தேங்கும் பகுதியில் தண்ணீர் குடிப்பதுடன், குளித்து நீந்தி மகிழ்ந்தும் வருகிறது.


    சம்பவத்தன்று 8 காட்டு யானைகள் கூட்டம் குட்டியுடன் வனத்தை விட்டு வெளியேறி, தாய்முடி எஸ்டேட் பகுதிக்கு வந்தன. அங்குள்ள தேயிலை தோட்டங்களில் யானைகள் கூட்டம் சிறிது நேரம் சுற்றி திரிந்தது.

    பின்னர் யானைகள் தேயிலை தோட்டங்களையொட்டி உள்ள தண்ணீர் தேக்கும் பகுதி வழியாக காட்டு யானைகள் கூட்டம் நடந்து சென்றன.

    அங்கு தண்ணீரை பார்த்ததும் யானைகள் கூட்டத்தில் இருந்த யானை ஒன்று மகிழ்ச்சியில் துள்ளிகுதித்தது.

    தண்ணீரை கண்ட யானை துள்ளிகுதித்த படி தண்ணீருக்குள் இறங்கி, தண்ணீரை பருகியது. மேலும் தண்ணீருக்குள் படுத்து ஆனந்த குளியல் போட்டு, நீந்தி மகிழ்ந்தது. அத்துடன் துதிக்கையால் தண்ணீரை ஊறிஞ்சி அதனை தனது உடல் முழுவதும் பீய்ச்சி கொண்டு மகிழ்ச்சியடைந்தது.

    சில மணி நேரம் தண்ணீரில் ஆனந்த குளியல் போட்ட யானை, அதன்பிறகு யானை கூட்டத்துடன் சேர்ந்து, வனத்தை நோக்கி சென்றது.

    அங்கு தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள் சிலர் வெகுதூரத்தில் இருந்து இந்த காட்சியை கண்டு ரசித்தனர். அதனை தங்கள் செல்போனில் வீடியோ, புகைப்படமும் எடுத்து கொண்டனர். இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிரவே தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

    ×