search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CENTRAL COMMITTEE SURVEY"

    • கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.
    • கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு.

    நாகப்பட்டினம்:

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.

    தொடர்ந்து, வானம் மேகமூட்டம் மற்றும் தொடர் பனிப்பொழிவு காரணமாக அறுவடை செய்த நெல்லை உலர வைப்பதில் விவசாயிகள் சிரமம் அடைந்து வந்தனர். மேலும், தெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. இதனையடுத்து, கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

    அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மத்திய உணவு துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு உதவி இயக்குனர் நாவீன் தலைமையில் தொழில்நுட்ப அலுவலர் ராகுல் ஆகிய 2 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

    முதல்கட்டமாக நாகை மாவட்டம், எரவாஞ்சேரியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரப்பதத்தை, அதற்கான கருவி மூலம் ஆய்வு செய்து பார்த்தனர். பின்னர், நெல்லின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்து சென்றதோடு, விவசாயிகளிடம் குறை களையும் கேட்டறிந்தனர்.

    அதனைத் தொடர்ந்து, மணக்குடி, சீயாத்தமங்கை, பட்டமங்கலம், தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் இரவு நேரத்தில் ஆய்வு செய்தனர். பின்னர், ஆய்வு பணிகளை முடித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

    ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இயக்குனர் அண்ணாதுரை, மாவட்ட கலெக்டர் ஆகாஷ், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    • ஈரப்பதம் குறித்து அறிந்து கொள்வதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் மையங்களில் இன்று மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்
    • இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், உடன் சென்று இது தொடர்பான விவரங்களை மத்திய குழுவினரிடம் விவரமாக எடுத்துரைத்தார்

    திருச்சி:

    தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அந்த வகையில், திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஜெங்கமராஜபுரம், ஆலங்குடி மகாஜனம், செம்பரை, திண்ணியம் ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தின் தற்போதைய நிலையை உயர்த்தி கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய குழு கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தது.

    இதில் அரசின் உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் துணை இயக்குனர் கான் தலைமையிலான குழுவினர் யூனூஸ் (தொழில்நுட்பம்), இந்திய உணவுக் கழகத்தின் உதவி பொது மேலாளர் குணால் குமார், கணேசன் (தரக் கட்டுப்பாடு),

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதல் நிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) செந்தில் ஆகியோர் இன்று (17.10.22) நேரில் பார்வையிட்டனர்.அப்போது கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து, விவசாயிகளிடமும், அலுவலர்களிடமும் கேட்டறிந்தனர்.

    இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், உடன் சென்று இது தொடர்பான விவரங்களை மத்திய குழுவினரிடம் விவரமாக எடுத்துரைத்தார்.உடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் பாலமுருகன், வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.




    ×