என் மலர்
நீங்கள் தேடியது "China"
- 14-வது தலாய் லாமா தனது 90-வது பிறந்தநாளையொட்டி அறிவிப்பு வெளியிட்டார்.
- முழு அதிகாரமும் காடன் ஃபோட்ராங் அறக்கட்டளைக்கு (Gaden Phodrang Trust) மட்டுமே உண்டு.
இந்தியாவின் தரம்சாலாவில் தஞ்சமடைந்துள்ள திபெத்திய பௌத்தம மத தலைவரான 14-வது தலாய் லாமா தனது 90-வது பிறந்தநாளையொட்டி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை தனது மறைவுக்குப் பிறகும் தொடரும் என்றும், உரிய நடைமுறைகளின்படி, திபெத்திய புத்த மதத்தினருக்குத் தலைமை தாங்கும் அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.
குறிப்பாக "சீனாவின் தலையீடு இல்லாமல், தனது வாரிசைத் தேர்வு செய்வதற்கான முழு அதிகாரமும் காடன் ஃபோட்ராங் அறக்கட்டளைக்கு (Gaden Phodrang Trust) மட்டுமே உண்டு" என்று தலாய் லாமா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தலாய் லாமாவின் வாரிசு சீன மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும், சீன சட்டங்கள், மதச் சடங்குகள் மற்றும் வரலாற்று மரபுகளுக்கு இணங்க வேண்டும் என்றும் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
- பிற சார்க் நாடுகளை இந்தப் புதிய கூட்டணிக்கு அழைப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கம்
- உரி பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பங்கேற்காது என்று அறிவித்திருந்தது.
தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்ட சார்க் (SAARC) அமைப்புக்கு பதிலாக புதிய பிராந்திய அமைப்பை உருவாக்க பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் செய்தித்தாள் தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச பிரதிநிதிகள் சமீபத்தில் சீன நகரமான குன்மிங்கில் சந்தித்தனர். இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பிற சார்க் நாடுகளை இந்தப் புதிய கூட்டணிக்கு அழைப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் இணைப்பை அதிகரிப்பதன் மூலம் பிராந்திய உறவுகளை வலுப்படுத்துவதே இந்தப் புதிய குழுவின் முக்கிய நோக்கம் என்று செய்தித்தாள் கூறியது.
சார்க் உறுப்பினர்களில் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் பூட்டான் ஆகியவை அடங்கும்.
இந்த அமைப்பு நிறுவப்பட்டால், அது இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு பெரும்பாலும் செயல்படாமல் இருந்த சார்க்கை மாற்றும். 2014 முதல் சார்க் உச்சிமாநாடு நடத்தப்படவில்லை.
2016 உச்சிமாநாடு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் உரி பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பங்கேற்காது என்று அறிவித்திருந்தது.
வங்கதேசம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் விலகியதால், அந்த உச்சிமாநாடும் ரத்து செய்யப்பட்டது.
- நாம் எதிர்கொள்ளும் அதே சிரமங்களையும் சவால்களையும் சீனா இந்தியாவுடன் எதிர்கொள்கிறது.
- செயற்கைக்கோள் படங்கள் மற்றும் புலனாய்வு தகவல்களை வழங்கியுள்ளது
இந்தியா குறித்த தகவல்களை சீனா தங்களுக்கு வழங்கியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இந்தியாவுடனான இராணுவ மோதலின்போது போது சீனா தங்களுடன் ஒத்துழைத்ததாகவும், இந்தியாவின் முக்கியமான உளவுத்துறை தகவல்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.
பதற்றமான காலங்களில் பாகிஸ்தான் தனது மூலோபாய தயார்நிலையை வலுப்படுத்த உதவும் வகையில் இந்தியாவின் பாதுகாப்பு திறன்கள் குறித்த தகவல்களை சீனா தனக்கு வழங்கியதாக அவர் கூறினார்.
"சீனா செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அச்சுறுத்தலின் அளவு குறித்த தகவல்களை வழங்கியது. பரஸ்பர அச்சுறுத்தல் இருக்கும்போது, நாடுகளுக்கு இடையே தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.
நாம் எதிர்கொள்ளும் அதே சிரமங்களையும் சவால்களையும் சீனா இந்தியாவுடன் எதிர்கொள்கிறது. மூலோபாய ரீதியாக நெருக்கமாக இருக்கும் இரண்டு நாடுகள் உளவுத்துறையைப் பகிர்ந்து கொள்வது இயல்பானது" என்று ஆசிப் கூறினார்.
- ஷாங்காய் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டுக்காக ராஜ்நாத் சிங் சீனா சென்றார்.
- பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் பற்றி குறிப்பிடாததால், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டு அறிக்கையில் கையெழுத்திட பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார்.
ஷாங்காய் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டுக்காக ராஜ்நாத் சிங் சீனா சென்றுள்ள நிலையில் பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கவலைகள் வெளிப்படையாகக் கவனிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் அவர் கையெழுத்திட மறுத்துள்ளார்.
ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுத்ததைத் தொடர்ந்து, சீனாவில் நடைபெற்ற S.C.O. பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நேற்றுடன் கூட்டு அறிக்கை இல்லாமல் முடிந்தது.
மாநாட்டில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், "பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிப்பதாகக் கூறினார். பயங்கரவாதிகள், அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் நிதி வழங்குபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்தியா தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள உரிமை உண்டு.
பயங்கரவாதத்தின் மையங்கள் இனி பாதுகாப்பாக இல்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். அவற்றை குறிவைக்க இனி தயங்க மாட்டோம்" என்று கூறினார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனர்.
- சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கொள்கையின் கருவியாகப் பயன்படுத்துகின்றன.
- பாதுகாப்பு, நம்பிக்கை ஆகியவற்றில் நிலவும் பற்றாக்குறை மிகப்பெரிய சவால்களாக உள்ளன.
பீஜிங்:
இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், கிர்கஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு, சீனாவின் கிங்டாவோவில் நடந்து வருகிறது. இதில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்றார். இதில் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து ராஜ்நாத்சிங் பேசினார். அவர் கூறியதாவது:-
சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கொள்கையின் கருவியாகப் பயன்படுத்துகின்றன. பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கின்றன. அத்தகைய நாடுகளை விமர்சிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தயங்கக்கூடாது. பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பினர்கள் பயங்கரவாதத்தை கண்டிக்க வேண்டும்.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் வடிவம் இந்தியாவில் லஷ்கர்-இ-தொய்பாவின் முந்தைய பயங்கரவாதத் தாக்குதல்களுடன் ஒத்துப்போகிறது. மத அடையாளத்தின் அடிப்படையில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றது.
பயங்கரவாதத்திற்கு எதிராகவும், எல்லை தாண்டிய பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தகர்க்கவும் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தியது. இந்தியா தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், குற்றவாளிகளைத் தண்டிக்கவும் உரிமை உண்டு.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட கண்டிக்கத்தக்க பயங்கரவாதச் செயல்களுக்குக் காரணமானவர்கள், அமைப்பாளர்கள், நிதியளிப்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களை பொறுப்பேற்க வைத்து அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
நமது பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நம்பிக்கை ஆகியவற்றில் நிலவும் பற்றாக்குறை மிகப்பெரிய சவால்களாக உள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கான மூல காரணம் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலில் உள்ளது. பயங்கரவாதத்துடனும், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பயங்கரவாதக் குழுக்களின் கைகளில் பேரழிவு ஆயுதங்களின் பெருக்கத்துடனும் அமைதியும் செழிப்பும் இணைந்து வாழ முடியாது. இந்த சவால்களைச் சமாளிப்பதற்கு தீர்க்கமான நடவடிக்கை தேவை ஆகும். நமது கூட்டுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இந்தத் தீமைகளுக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒன்றுபட வேண்டும்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு சீனாவில் நடைபெறுகிறது.
- இதில் பங்கேற்க இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சீனா சென்றுள்ளார்.
பீஜிங்:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இதற்கிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாடு சீனாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சீனா சென்றுள்ளார்.
சீனாவின் சாண்டோங் மாகாணம் குயிங்தவோ நகரத்திற்கு விமானத்தில் சென்ற ராஜ்நாத் சிங்கை சீன அதிகாரிகள், இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.
சீனா சென்றுள்ள ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
- டைப்-88 குறுகிய தூர தரையிலிருந்து கப்பல் வரையிலான ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது.
- அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் தங்கள் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.
ஜப்பான் தனது முதல் ஏவுகணை சோதனையை அதன் மண்ணில் நடத்தியுள்ளதாக ஜப்பானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனை நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் நடத்தப்பட்டது. டைப்-88 குறுகிய தூர தரையிலிருந்து கப்பல் வரையிலான ஏவுகணை (Tyne-88 surface-to-shin short range missile) சோதனை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் சீனாவில் போர் கப்பல் ஜப்பான் அருகில் உள்ள கடற்பரப்பில் காணப்பட்டதாக ஜப்பன் கவலை தெரிவித்திருந்தது. எனவே அதிகரித்து வரும் சீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் தனது பாதுகாப்புத் திறன்களை அதிகரித்து வருகிறது.
புதிய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக இருந்ததா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
ஜப்பான் இதற்கு முன்பு அதன் நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் தங்கள் ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. தங்கள் சொந்த மண்ணில் ஜப்பான் ஏவுகணை சோதனை நடத்துவது இதுவே முதல் முறை ஆகும்.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு செயலாளர்கள் மாநாடு சீனாவில் நடந்து வருகிறது.
- இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றுள்ளார்.
பீஜிங்:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு செயலாளர்கள் மாநாடு சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், சீனா சென்றுள்ள அஜித் தோவல் இன்று அந்நாட்டு துணை அதிபர் ஹன் யங்கை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்பட்டு பிராந்திய அமைதிக்கு நிலைநாட்டுவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
- ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளது.
- இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது
ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல், விலைகளும் உயர் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹார்முஸ் நீரிணையை மூடும் ஈரானின் முடிவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, "ஹார்முஸ் நீரிணையை மூடும் ஈரானின் முடிவு பொருளாதார தற்கொலைக்கு சமம். இது மற்ற நாடுகளின் பொருளாதாரங்களையும் பாதிக்கும். சீன அரசாங்கம் இது குறித்து ஈரானிடம் பேசவேண்டும். ஏனென்றால் அவர்கள் தங்கள் எண்ணெய் தேவைக்காக ஹார்முஸ் நீரிணையை பெரிதும் நம்பியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
- 2014 முதல், நமது பொருளாதாரத்தில் உற்பத்தி 14% ஆகக் குறைந்துள்ளது.
- நாம் இறக்குமதி செய்கிறோம், ஆனால் உற்பத்தி செய்வதில்லை, இதனால் சீனா லாபம் அடைகிறது.
மோடி தீர்வுகளை முன்வைப்பதில் அல்ல, முழக்கங்களை எழுப்புவதில் தான் திறமை வாய்ந்தவர் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
டெல்லியில் சிவம் மற்றும் சைஃப் ஆகியோரை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "மேக் இன் இந்தியா திட்டம் தொழிற்சாலை உற்பத்தி அதிகரிக்கும் என்று உறுதி அளித்தது. அப்படியானால் உற்பத்தி ஏன் மிகக் குறைவான அளவில் உள்ளது. இளைஞர்களின் வேலையின்மை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. மேலும் சீனாவிலிருந்து இறக்குமதிகள் ஏன் இரட்டிப்பாகியுள்ளன?
மோடி தீர்வுகளை அல்ல, முழக்கங்களை எழுப்புவதில் தேர்ச்சி பெற்றுள்ளார். 2014 முதல், நமது பொருளாதாரத்தில் உற்பத்தி 14% ஆகக் குறைந்துள்ளது.
உண்மை அப்பட்டமானது: நாம் உதிரிபொருட்களை அசெம்பிள் செய்கிறோம், இறக்குமதி செய்கிறோம், ஆனால் உற்பத்தி செய்வதில்லை. சீனா லாபம் அடைகிறது.
புதிய யோசனைகள் எதுவும் இல்லாமல், மோடி சரணடைந்துவிட்டார். மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (PLI) திட்டம் கூட இப்போது அமைதியாகத் திரும்பப் பெறப்படுகிறது.
நேர்மையான சீர்திருத்தங்கள் மற்றும் நிதி உதவி மூலம் லட்சக்கணக்கான உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு அடிப்படை மாற்றம் இந்தியாவிற்குத் தேவை.
நாம் மற்ற நாடுகளுக்கு ஒரு சந்தையாக இருப்பதை நிறுத்த வேண்டும். நாம் இங்கே உற்பத்தி செய்யவில்லை என்றால், உற்பத்தி செய்பவர்களிடம் இருந்து நாம் வாங்கிக் கொண்டே இருப்போம். நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
- புலியின் உரோமம் தீய சக்திகளை அகற்றும் என சீனாவில் நம்பப்படுகிறது.
- சுற்றுலா பயணிகளின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
சீனாவின் லியானிங் மாகாணத்தில் உயிரியல் பூங்காவில், ஓய்வெடுத்து கொண்டிருந்த புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலா பயணிகளின் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
புலியின் உரோமம் தீய சக்திகளை அகற்றும் என அந்நாட்டில் நம்பப்படுவதால் சுற்றுலா பயணிகள் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் விலங்குகள் துன்புறுத்தப்படுவதால் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என பூங்கா நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட பேச்சுவார்த்தை.
- சீன மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழங்களில் படிக்க அனுமதி டிரம்ப் ஒப்புதல்.
அமெரிக்க அதிபராக 2ஆவது முறை பதவி ஏற்றதும் டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உலக நாடுகள் குறைக்க வேண்டும் என எச்சரித்தார். இல்லையெனில் பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்ததோடு, கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தினார்.
இதனால் வரத்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. பெரும்பாலான நாடுகள் கேட்டுக்கொண்டதன் மூலம் பரஸ்பர வரி விதிப்பை நிறுத்தி வைத்தார். ஆனால், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்ததால் இரு நாடுகளும் மேலும் மேலும் வரியை உயர்த்தின.
இதற்கிடையே கடந்த வாரம் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் டெலிபோனில் பேசினார். பின்னர் வர்த்தக ஒப்பந்தம் குறித்து இரு நாட்டின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத்தெரிவித்தார்.
இந்த நிலையில் வர்த்தக ஒப்பந்தத்தில் சீனாவிடம் இருந்து காந்தம் மற்றும் அரிய கனிமங்களை அமெரிக்கா பெறும். சீன பொருட்களுக்கு 55 சதவீதம் வரி விதிக்கப்படும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக, சீன மாணவர்கள் அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிப்பது உட்பட ஒப்புக்கொண்டதை சீனாவிற்கு அமெரிக்கா வழங்கும் என்றார்.