search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corruption and irregularities"

    • சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர்

    குடியாத்தம்:

    வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குடியாத்தம் சித்தூர் கேட் அருகே தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம், போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை பொருட்கள் பழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், ஆவின் முன்னாள் தலைவருமான வேலழகன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, ஒன்றிய செயலாளர்கள், சீனிவாசன், பாபுஜி, ஆனந்தன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.மூர்த்தி, எஸ்.அமுதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லோகநாதன், நகரமன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    குடியாத்தம் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.சிவா வரவேற்றார்.

    குடியாத்தம் நகர செயலாளர் ஜெ.கே.என்.பழனி துவக்க உரையாற்றினார்.

    மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வனராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் ரமேஷ்குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி தலைவர் புகழேந்தி, வர்த்தக அணி செயலாளர் இமகிரிபாபு, மாவட்ட பொருளாளர் காடைமூர்த்தி, ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் கள்ளூர்பாஸ்கரன், ஒன்றிய வர்த்தக அணி பொருளாளர் கள்ளூர்பாபு உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    ×