என் மலர்
நீங்கள் தேடியது "Culprit arrest"
- கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை.
- ஞானசேகரன் வேறு ஏதேனும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் விசாரணை.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் புகார் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க நான்கு சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஞானசேகரன் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஞானசேகரன் வேறு ஏதேனும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024ம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும் அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் AWPS- ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசாரணை/ செய்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. புலன்விசாரணையின் போது, அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சத்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பெருநகர சென்னை காவல்துறை அதிகாரிகளும், பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து (Joint Security Review) மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து நேற்று இரவு சவுதி விமானம் ஒன்று சென்னை வந்தது.
இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களுடைய பாஸ்போர்ட்களும் சரி பார்க்கப்பட்டது.
அப்போது ரியாத்தில் இருந்து திரும்பிய நாகராஜ் (35) என்பவருடைய பாஸ்போர்ட் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை.
7 வருடங்களுக்கு முன்பு வாகனம் மோதி ஒருவர் உயிர் இழந்தார். அதன்பிறகு தலைமறைவான அவர் துபாய் சென்றுவிட்டார்.
விபத்து தொடர்பான வழக்கை முடிக்காமல் சென்றதால் நாகராஜ் தேடப்படும் குற்றவாளி என்று விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவித்தார். இது சென்னை விமான நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த நாகராஜ் தேடப்படும் குற்றவாளி என்பதை குடியுரிமை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து, அவரை சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் நாகராஜை விருதுநகர் போலீசார் அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடைபெற்றது.
ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் ரஷீத்கான். செல்போன் மொத்த விற்பனை கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-ந் தேதி இவர் வசூலான பணம் ரூ. 70 லட்சத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். ஏழுகிணறு பகுதியில் வந்தபோது மர்ம கும்பல் ரஷீத்கானை வழிமறித்து அரிவாளால் வெட்டி ரூ. 70 லட்சத்தை பறித்து சென்று விட்டனர்.
இது தொடர்பாக ஏற்கனவே 4 பேரை போலீசார் கைது செய்து ரூ. 9½ லட்சத்தை பறிமுதல் செய்து இருந்தனர். இந்த நிலையில் திருவள்ளூரில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான சவுகார்பேட்டையை சேர்ந்த முத்து சரவணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள். #tamilnews
திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த செந்தில் குமார் கடந்த 1997-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு கைது செய்தனர். இதில்19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான செல்வம் 20 வருடமாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் நாமக்கலில் அவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். #tamilnews






