என் மலர்
நீங்கள் தேடியது "Death of husband"
- திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
- உணவு எடுத்து வருவதற்காக இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள மருதூர் மேல தெருவை சேர்ந்தவர் மூவேந்தன் (வயது 30) பெயிண்டர். இவர்களுக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் சுஜாதா கர்ப்பம் தரித்தார்.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை பிரசவத்துக்காக மூவேந்தன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் அவருக்கு உணவு எடுத்து வருவதற்காக இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
சமயபுரம் மருதூர் சாலையில் ராஜ கள்ளிக்குடி என்ற பகுதி சாலை வளைவில் திரும்பியபோது தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூல மாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே மூவேந்தன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மருத்துவ மனையில் பிரசவத்துக்காக மனைவி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதே மருத்துவமனையில் பிரேத கிடங்கில் அவரது கணவரின் உயிரிழந்த உடல் வைக்கப்பட்டு இருப்பதும், கணவர் உயிரிழந்த செய்தியை மனைவியுடன் சொல்ல முடியாமல் அவர்களின் உறவினர்கள் தவிப்பதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சேகர் அவரது மனைவி அலமேலுவுடன் தனியார் பஸ்சில் நேற்று சென்னை புறப்பாட்டார்.
- திருச்சியில் இருந்து சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
கடலூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூர் தாலுகா மேல்சார் கண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 70). இவரது மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக சேகர் அவரது மனைவி அலமேலுவுடன் தனியார் பஸ்சில் நேற்று சென்னை புறப்பாட்டார். அப்போது உளுந்தூர்பேட்டை பாதூர் காந்திநகர் அருகே டீ குடிப்பதற்காக பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பயணிகளும் டீ குடிக்க இறங்கினர். அந்த நேரத்தில் சிறுநீர் கழிக்க சாலையோரம் சென்ற சேகர் மீது திருச்சியில் இருந்து சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சேகரின் உடலை கைப்பற்றி பிரதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நள்ளிரவில் மனைவி கண் எதிரே கணவன் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.