என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "encroachment houses"

    • ஈரோடு மரப்பாலம் பகுதியில் நீர் வழி பாதையில் ஓடை அருகே 17 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டு இருந்தன.
    • இந்நிலையில் இன்று ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மரப்பாலம் பகுதியில் நீர் வழி பாதையில் ஓடை அருகே 17 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டு இருந்தன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.

    இதற்காக மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட வீடுகளை சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நடந்தது. மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் சண்முகவடிவு, இளநிலை பொறியாளர் செந்தாமரை ஆகியோர் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வீடுகளை இடிப்பதற்கு முன் வீடுகளை சேர்ந்தவர்கள் தங்களது உடைமைகளை எடுத்து சென்றனர். 5 பொக்லைன் எந்திரன் மூலம் வீடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    • வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றாமல் இருந்தனர்.
    • காலி செய்யாமல் இருந்த 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரத்துடன் அகற்றும் பணி இன்று தொடங்கியது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் நகரப் பகுதிக்குள் வேகவதி ஆறு பாய்கிறது. ஆற்றின் கரையோரத்தில் இரு புறங்களிலும் ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் வேகவதி ஆற்றின் கரைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்ற போது அங்கு குடியிருந்த மக்களுக்கு கீழ்கதிர்பூர் பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டது.

    ஆனால் வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை அகற்றாமல் இருந்தனர். இதனால் வேகவதி ஆறு தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்தது.

    இந்நிலையில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதையடுத்து வேகவதி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணியை நீர்வளத் துறை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தாயார் குளம் பகுதியில் வேகவதி ஆற்றின் கரையோரம் அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு காலி செய்யாமல் இருந்த 78 வீடுகளை ஜே.சி.பி. எந்திரத்துடன் அகற்றும் பணி இன்று தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் வருவாய்த்து றையினரும் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியை கண்காணித்து வருகிறார்கள். வேகவதி ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் முழுவதையும் அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×