என் மலர்
நீங்கள் தேடியது "Financial support"
- பெற்றோர்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
- காசோலையினை தமிழக செய்தித்துறை அமைச்சர் இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கினார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி சாமுண்டி நகர் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த இருதய லட்சுமி என்பவர் மூளைக் காசநோயினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தொடர் சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க சமூக பங்களிப்பு நிதியிலிருந்து நிதி உதவியாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கினார்.
இது குறித்து அமைச்சர் தெரிவித்ததாவது, திருப்பூர் மாநகராட்சி சாமுண்டி நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், ராஜேஸ்வரி தம்பதியரின் மகள்இருதய லட்சுமி(வயது 28) மூளைக் காசநோயினால் பாதிக்கப்பட்டு உடல் செயல் இழந்து 8ஆண்டுகளாக பேசவும் முடியாமல், நடக்கவும் முடியாமல் இருந்து வந்த நிலையில் அவரின் பெற்றோர்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்சங்க சமூக பங்களிப்பு நிதியிலிருந்து நிதி உதவியாக ரூ.5 லட்சத்திற்கான காசோலை பெற்றோர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது உடல் நலம் வெகு விரைவில் பூரண குணமடைந்து அவரது லட்சியமான விஞ்ஞானியாக வேண்டும் என்கிற கனவு நிறைவேற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். அப்போது மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ், துணை மேயர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கவுரவ தலைவர் சக்திவேல் மற்றும் சங்கத்தலைவர்சுப்பிரமணியன், இணை செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
- ஸ்காட் கல்வி நிறுவனங்களின் ஓர் அங்கம் ஸ்காட் நிர்மான் அமைப்பு ஆகும்.
- நிதி உதவியினை ஸ்காட் குழும பள்ளிகளின் தாளாளர் தர்ஷினி அருண்பாபு வழங்கினார்.
நெல்லை:
ஸ்காட் கல்வி நிறுவனங்களின் ஓர் அங்கமான ஸ்காட் நிர்மான் அமைப்பின் மூலம் கிராமங்களில் ஏழை, ஆதரவற்ற பெண்களுக்கு ஆடுவளர்ப்பு, கோழி வளர்ப்பு போன்றவற்றிற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன்சர்வீஸ், கடை, வெல்டிங் பட்டறை, இரு சக்கரவாகன பழுதுநீக்கும் கடை போன்றவற்றிற்கும் சுமார் ரூ.20 லட்சம் நிதி உதவியை 100-க்கும் மேற்பட்டோருக்கு வண்ணார்பேட்டை எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
இந்தநிதி உதவியினை ஸ்காட் குழும பள்ளிகளின் தாளாளர் தர்ஷினி அருண்பாபு வழங்கினார். திட்டம் குறித்த விளக்கத்தை ஸ்காட் நிர்மான் இயக்குநர் சார்லஸ் எடுத்துரைத்தார். விழாவில் எப்.எக்ஸ். கல்லூரி முதல்வர் வேல்முருகன், பொதுமேலாளர்கள் ஜெயக்குமார் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ராஜேஷ் வரவேற்று பேசினார். முடிவில் சுந்தர் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்காட் நிறுவனங்களின் தலைவர் கிளிட்டஸ்பாபு, துணைத்தலைவர் டாக்டர் அமலிகிளிட்டஸ்பாபு ஆகியோரின் வழிகாட்டுதலில் ஸ்காட் நிர்மான் இயக்குநர் சார்லஸ் மற்றும் அனைத்து பணியாளர்களும் செய்திருந்தனர்.






