என் மலர்
நீங்கள் தேடியது "Grand exhibition"
- ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் பொன்னியின் செல்வன் பிரமாண்ட பொருட்காட்சியை எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்.
- 8-வது வார்டு கவுன்சிலர் டி.ஆர்.செல்வராணி விஸ்வநாதன் குத்து விளக்கேற்றுகிறார்.
கீழக்கரை
ராமநாதபுரம்-கேணிக்கரை ரோடு மகர்நோன்பு பொட்டல் அருகே உள்ள நல்லம்மாள் மைதானத்தில் ஸ்ரீ சாய்ராம் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் பிரமாண்டமாக பொன்னியின் செல்வன் பொருட்காட்சி இன்று மாலை 5.30 மணியளவில் தொடங்க உள்ளது.இந்த பொருட்காட்சியை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார்.
ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் முன்னிலை வகிக்கிறார்.நகர்மன்ற துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம் வரவேற்கிறார். 8-வது வார்டு கவுன்சிலர் டி.ஆர்.செல்வராணி விஸ்வநாதன் குத்து விளக்கேற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசாய்ராம் எண்டர்டெயின்மெண்ட் உரிமையாளர் எம்.கே.உதயகுமார் செய்து வருகிறார்.
- பாளையில் முதன் முறையாக மாபெரும் பொருட்காட்சி வருகிற 29-ந்தேதி முதல் தொடங்குகிறது.
- பொருட்காட்சி யில் ஆழ்கடல் மீன்களின் குகை கண்காட்சி, மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் காட்சி இடம் பெறுகிறது.
நெல்லை:
பாளையில் முதன் முறையாக மாபெரும் பொருட்காட்சி வருகிற 29-ந்தேதி முதல் தொடங்குகிறது.
பாளை மத்திய சிறைச்சாலை எதிரில் உள்ள காதுகேளாதோர் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த பொருட்காட்சி யில் ஆழ்கடல் மீன்களின் குகை கண்காட்சி, மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் காட்சி இடம் பெறுகிறது. மேலும் பொருட்காட்சி யில் வண்ண வண்ண மீன்களின் கண்காட்சி, சிறுவர்களுக்கான பொழுது போக்கு பூங்கா, பெண்களுக்கான ஷாப்பிங் திருவிழா, நுகர்வோர் ஸ்டால் மற்றும் உணவு திருவிழா உள்ளிட்டவை இடம் பெறுகின்றன.
தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த பொருட்காட்சி நடக்கிறது. ஆழ்கடல் மீன்கள் கண்காட்சியானது சிங்கப்பூர், மலேசியாவில் இடம் பெறுவது போல் தற்போது முதன் முறையாக பாளையில் நடைபெற உள்ள பொருட்காட்சியில் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.