search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kolathur lake"

    • 13 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • இந்த ஆய்வின் போது மேயர் பிரியா, சென்னை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்தூர் ஏரியின் முன்னேற்ற பணிகள் குறித்து இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும முதன்மைச் செயல் அலுவலர் சிவஞானம், கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் கணேசன், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    சி.எம்.டி.ஏ. சார்பில் 13 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகளை முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். கொளத்தூர் ஏரியில் ரூ. 6.26 கோடி செலவில் முக்கிய அம்சங்களாக நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், ஒளிரும் மீன் சிற்பங்கள், இசை பூங்கா, தனித்துவமிக்க இருக்கைகள், படகு சவாரி, சூரிய விளக்கு கம்பங்கள், கரையில் செயற்கை நீர்வீழ்ச்சி, கடைகள், குடிநீர், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 45 மாதங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பெருநகர சென்னைக்கான சிந்தனையில் உதிர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.

    ரூ.250 கோடி செலவில் 13 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் 9 ஏரிகளின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முடிந்த அளவிற்கு டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 20 ஏக்கர் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வீடு கட்டவும் மற்றும் வணிக பயன்பாட்டுக்காகவும் எடுத்துள்ளார்கள்.
    • 842 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கண்டிப்பினை தொடர்ந்து நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு அறிக்கை கொடுக்கப்படுகிறது.

    சென்னை கோவிலம்பாக்கம் அருகில் உள்ள சுண்ணாம்பு கொளத்தூர் ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கொடுத்துள்ள அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த ஏரி 80 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடந்தது. இந்த பகுதியின் நீர் ஆதாரமாகவும் சுற்றுப்பகுதியின் விவசாய தேவைக்கு உதவியாகவும் இருந்தது.

    இந்த ஏரி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு பாதியாக சுருங்கியது. இதுபற்றி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து ஆய்வு செய்ய கடந்த 2020-ம் ஆண்டு ஒரு குழுவை அமைத்தது.

    இந்த குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் அறிக்கை சமர்பிக்கவும் உத்தரவிட்டு இருந்தது. மாவட்ட கலெக்டர் மற்றும் நீர்வள ஆதார துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு கடந்த மாதம் இறுதிக்குள் அறிக்கை கொடுக்காவிட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தது.

    இதையடுத்து கலெக்டர் அமிர்த ஜோதி இந்த ஏரி ஆக்கிரமிப்பை பற்றி கடந்த மாதம் 10-ந் தேதி அறிக்கை கொடுத்துள்ளார்.

    20 ஏக்கர் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வீடு கட்டவும் மற்றும் வணிக பயன்பாட்டுக்காகவும் எடுத்துள்ளார்கள். இதுபற்றி நீர் வள ஆதார அமைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து 842 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. யாராவது சொந்த இடம் என்று உரிமை கொண்டாட நேர்ந்தால் அது தொடர்பான ஆவணங்களை கொடுக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். விரைவில் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.

    ×