search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kundarapalli Weekly Market"

    • கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன.
    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.

    கிருஷ்ணகிரி:

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.7 கோடியே 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை ஆனது.

    நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை 17ம் தேதி முஸ்லீம் மக்களால் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் இன்று வழக்கத்தை காட்டிலும் அதிகமாக கொண்டு வரப்பட்டன.

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர் மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன. அதிகாலை 5 மணி முதல் சந்தையில் ஆடுகள் விற்பனை தொடங்கியது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கோலார் மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், சித்தூர், மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மற்றும் தமிழகத்தில் வேலூர், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.

    வழக்கமாக 10 கிலோ எடை கொண்ட ஆடு, 12 ஆயிரம் ரூபாய் விலை போகும். ஆனால், பக்ரீத் பண்டிகை விற்பனை என்பதால் சற்று விலை அதிகரித்து, 10 கிலோ எடை கொண்ட கிடா ஆடு 15 ஆயிரம் முதல், 17 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது.

    குறைந்த பட்சம் ஒரு ஆடு 10 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக ஒரு ஆடு 67 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. இன்று கிடா ஆடுகள் அதிகம் விற்பனை ஆனது. 45 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனை ஆனதால், இன்று ஒரே நாளில் 7.50 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சந்தையில் ஆடுகள், 15 ஆயிரம் முதல், 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
    • சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு கிராமப்புறங்களில் சாமிக்கு ஆடு, கோழிகள் பலியிட்டு வணங்குவது வழக்கம். அதன்படி வழக்கமாக நடைபெறும் குந்தராப்பள்ளி வாரசந்தையில் வழக்கத்தை விட ஆடுகள், கோழிகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

    ஆடுகளை விற்கவும், வாங்கி செல்லவும் விவசாயிகளும், வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில் திரண்டனர். வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். குந்தாரப்பள்ளி சாலையில் ஆடுகளை ஏராளமான சரக்கு வாகனங்களில் கொண்டு வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சந்தையில் ஆடுகள், 15 ஆயிரம் முதல், 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. இன்று ஒரே நாளில் 6 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையான போதும், வெள்ளாடுகள் விற்பனையான அளவிற்கு, செம்மறி ஆடுகள் விற்பனை ஆகவில்லை எனவும் வியாபாரிகள் கூறினர். இதேபோல் சந்தையில் நாட்டுக்கோழிகள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் ஆடுகள் மற்ற நாட்களை விட நல்ல விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×