search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Leakage in gas"

    • மாணவர்கள் சிலர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • பள்ளியில் அறிவியல் வல்லுநர்கள் ஆய்வு நடத்தினர்.

    சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ- மாணவிகள் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டனர்.இதில், மாணவர்கள் சிலர் மயக்கம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மயக்கமடைந்த 3 மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிறகு, உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் 32 மாணவிகள் என மொத்தம் 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பள்ளியில் அறிவியல் வல்லுநர்கள் ஆய்வு நடத்தினர்.

    இந்த நிலையில், திருவொற்றியூர் விக்டரி பள்ளிக்கு நாளை (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், போலீசார், அறிவியல் வல்லுநர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேரில் ஆய்வு செய்தனர். 

    • பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ- மாணவிகள் அவசரமாக வெளியேற்றம்.
    • திருவொற்றியூர் மருத்துவமனையில் ஒரு படுக்கையில் இரண்டு பேர் வீதம் படுக்க வைத்து சிகிச்சை.

    சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவ- மாணவிகள் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டனர்.

    இதில், மாணவர்கள் சிலர் மயக்கம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மயக்கமடைந்த 3 மாணவிகளை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிறகு, உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் 32 மாணவிகள் என மொத்தம் 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    திருவொற்றியூர் மருத்துவமனையில் குறைந்த படுக்கைகளே இருப்பதால், ஒரு படுக்கையில் இரண்டு பேர் வீதம் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பள்ளியில் இருந்து மாணவர்களை திடீரென வெளியேற்றப்பட்டதால், குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளி முன்பு பெற்றோர்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    திருவொற்றியூர் மருத்துவமனையில் குறைந்த படுக்கைகளே இருப்பதால், ஒரு படுக்கையில் இரண்டு பேர் வீதம் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சில மாணவிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

    பள்ளி அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வாயு வெளியேறியதா ? அல்லது பள்ளியில் உள்ள ஆய்வு கூடத்தில் இருந்து வாயு வெளியேறியதா ? என விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, காலை 10.30 மணியில் இரு்நது வாயு நெடி வெறியேறிய நிலையில், உடனடியாக மாணவர்களை வெளியேற்றாதது ஏன் என பெற்றோர் பள்ளி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தனியரசு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், சம்பந்தப்பட்ட பளளியில் அறிவியல் வல்லுநர்கள் ஆய்வு நடத்தினர்.

    பள்ளி ஆய்வகத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை ஆணையர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

    இதேபோல், தனியார் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 31 பேர் கொண்ட குழு பள்ளிக்கு வருகை தந்தனர். அங்கு, ரசாயன வாயு கசிவு பாதுகாப்பு உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    • திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டதால் ஈரமான மணல் பகுதியில் சாக்கை வைத்து சிலிண்டரை வைத்து கேசை முழுவதுமாக வெளியேற்றினார்.
    • டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பெரும்விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இருந்து ஒரு மினி வேனில் 21 கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு டிரைவர் செந்தில் என்பவர் திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். சீலப்பாடி ஆயுதப்படை மைதானம் அருகே சென்றபோது சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு வெளியேறிக்கொண்டே இருந்தது. இதை அருகில் இருந்த வாகனஓட்டுனர்கள் கண்டறிந்து செந்திலிடம் தெரிவித்தனர்.

    உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு கசிவு ஏற்பட்ட சிலிண்டரை கீழே இறக்கினார். அதன்பிறகு ஈரமான மணல் பகுதியில் சாக்கை வைத்து சிலிண்டரை வைத்தார். பின்னர் மெதுவாக கேசை வெளியேற்றினார். அப்போது அப்பகுதி முழுவதும் புகையாக காட்சியளித்தது.

    சிலிண்டரில் இருந்து கேஸ் முழுவதும் வெளியானதை உறுதி செய்த பிறகு அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இச்சம்பவத்தை அருகில் இருந்து பார்க்க பயந்து பலர் தலைதெறிக்க ஓடினர். இருந்தபோதும் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பெரும்விபத்து ஏற்படாமல் தவிர்த்தார். அதன்பிறகு சிலிண்டரின் அடிபாகத்தை பார்த்தபோது அது துருபிடித்து கேஸ் வெளியேறும் அளவிற்கு தரமற்ற நிலையில் இருந்தது தெரியவந்தது.

    ஒரு வேளை இந்த சிலிண்டர் வீடுகளுக்கு சப்ளை செய்யப்பட்டிருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். எனவே வீடுகளுக்கு வரும் கேஸ் சிலிண்டர்களை இல்லத்தரசிகள் கவனமுடன் பார்த்து வாங்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதேபோன்று கேஸ் நிறுவனங்களும் சிலிண்டரின் தரம் குறித்து அறிந்த பிறகே அதனை சப்ளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×