search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mukurthakal performance"

    • கமுதி முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது.
    • முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தி யப்பட்ட முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இது இந்த பகுதியில் பிரசித்திபெற்ற கோவில் ஆகும். இங்கு பங்குனி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோவிலின் வடக்கு வாசல் முன்பு முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது. மேளதாளம், வான வேடிக்கையுடன் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்பலகாரர் சக்திவேல், மாத முறைகாரர் சின்னமணி மற்றும் உறவின் முறை டிரஸ்டிகள், நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    அக்னிச்சட்டி, பூக்குழி இறங்குதல், உடல் முழுவதும் சேறு பூசும் நேர்த்திகடன் உட்பட பல்வேறு நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் நேற்று முதல் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டு, விரதம் கடைபிடித்தனர்.அடுத்த மாதம் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, ரிஷபம், பூதம், காமதேனு, யானை, வெள்ளிக்குதிரை உள்பட பல்வேறு வாகனங்களில் அம்மன் நகர்வலம் வரும். ஏப்ரல் 4-ந்தேதி கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெறும். 5-ந் தேதி அக்னிச்சட்டி திருவிழா நடைபெறும்.

    இதில் தமிழகத்தில் எங்குமில்லாத விநோத வழிபாடான பக்தர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் உடல் முழுவதும் களிமண் சேறுபூசி, கோவிலை வலம் வருவார்கள். 7-ந்தேதி 2007 திருவிளக்கு பூஜை, 8-ந் தேதி முளைப்பாரி ஊர்வலத்துடன் திருவிழா நிறைவுபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.

    ×