என் மலர்
நீங்கள் தேடியது "Nanjil Sampath"
- கொள்கை எதிரி என பாஜகவை கூறியதில் இருந்து விஜய் பின்வாங்கவில்லை.
- மல்லை சத்யா அழைத்தார். நான்தான் திராவிட வெற்றிக் கழகத்தில் இணையவில்லை.
தவெக தலைவர் விஜய் பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறினாலும், திமுகவை விமர்சனம் செய்யும் அளவிற்கு அவர்களை விமர்சனம் செய்வது இல்லை. மேலும் பாஜகவின் கூட்டணியில் இருக்கும் அதிமுகவையும் அந்தளவு விமர்சித்ததில்லை எனவும் நீண்ட நாட்களாகவே ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் விஜய், பாஜகவின் 'சி' டீம் எனவும் திமுகவால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். மௌனம் பாஜகவின் ஆதரவு மனநிலை என்று எடுத்துக்கொள்ளலாமா எனவும் பலநாட்களாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதன் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கான விளக்கத்தை இன்று தன் கட்சியில் இணைந்த புதிய நிர்வாகி நாஞ்சில் சம்பத்திடம் பகிர்ந்துள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத்,
"கொள்கை எதிரி என பாஜகவை கூறியதில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. பாஜக ஆதரவு தொடர்பான விமர்சனங்கள் குறித்து விஜய்யிடம் பேசினேன். அதற்கு, "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அதிகாரத்தில் இருக்கும் கட்சி. தேர்தல் இங்கு நடக்கப்போகிறது. அதனால் திமுகவை கூர்மையாக விமர்சிக்கிறேன். பாஜகவிற்கு நேரம் வரும்பொழுது பார்த்துக் கொள்ளலாம்" என தெரிவித்தார்.
மல்லை சத்யா அழைத்தார். நான்தான் திராவிட வெற்றிக் கழகத்தில் இணையவில்லை. அதற்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கிறது. திமுகவில்தான் ஆயுள் முழுவதும் பணியாற்ற வேண்டும் என நினைத்தேன். ஆனால் வைகோ வெளியேறியதால் வெளியேறினேன். அவர்கள் என்னை நீக்கவில்லை. நான் பிரச்சாரம் செய்தே வாழ்ந்தவன் என்பதால், அந்த வாய்ப்பை விஜய்யிடம் கேட்டுள்ளேன். திமுகவையும், பாஜகவையும் ஒரேநேரத்தில் எதிர்க்கும் துணிச்சலையே நான் பாராட்டுகிறேன். எதிர்ப்பவர் ஏன் கேள்வி கேட்கவில்லை என்பதை அவரிடம்தான் கேட்கவேண்டும்." என தெரிவித்தார்.
- தவெகவில் திராவிடம் உள்ளது.
- தேர்தல் அறிக்கை வரும்போது விஜய் கொண்டுவரும் மாற்றங்கள் குறித்து தெரியவரும்.
திமுக, மதிமுக, அதிமுக என தமிழ்நாட்டின் மூத்த கட்சிகளில் பயணித்த நாஞ்சில் சம்பத் இன்று தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"ஜெயலலிதா மறைந்தபின் எந்த அரசியல் கட்சியிலும் என்னை இணைத்துக் கொள்ளாமல் இருந்தேன். பெரியார், அண்ணா இலட்சியங்களை பேசி வந்த நான் இன்று தவெகவில் இணைந்துள்ளேன். நாடு முழுவதும் பரப்புரை செய்ய விஜய் எனக்கு அனுமதி தந்துள்ளார். என்னைப் பார்த்து நான் உங்கள் ரசிகர் என விஜய் கூறினார். உடனே மெய்சிலிர்த்து போனேன். தொலைக்காட்சி தொடர் ஒன்றில் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தேன். அதிலிருந்து என்னை வசைபாடினார்கள். இதனால் மனமுடைந்துபோனேன்.
திமுகவின் அறிவுத் திருவிழாவில் திட்டமிட்டு என்னை நிராகரித்தனர். எந்த பரிந்துரைக்கும் திமுகவினர் முன் நான் சென்று நிற்பதில்லை. கேட்டால் சைக்கிள்கூட தரமாட்டார்கள். கடந்த கால காயங்களில் இருந்து விடுபட்டவனாக உணர்கிறேன். தவெகவில் இணைந்துள்ளேன். உற்சாக மனநிலையில் உள்ளேன்." என தெரிவித்தார்.

விஜய்யுடன் நாஞ்சில் சம்பத்
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
"நான் இயங்குவதற்கான வாய்ப்பை விஜய் வழங்கியிருக்கிறார். தவெகவில் திராவிடம் உள்ளது. பெயரில் இல்லாமல் இருக்கலாம். தமிழ் தேசியமும், திராவிட தேசியமும் ஒன்றுதான். திராவிட இயக்கத்தின் நீட்சியாகவே விஜய்யை பார்க்கிறேன். தேர்தல் அறிக்கை வரும்போது விஜய் கொண்டுவரும் மாற்றங்கள் குறித்து தெரியவரும். லட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாக வைத்திருக்கும் ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம்தான்.
இளைஞர்களை வைத்துக்கொண்டு அதிரடி மாற்றங்களை செய்வதற்கு விஜய்யிடம் திட்டம் இருக்கிறது என நம்புகிறேன். திருப்பரங்குன்றம் சம்பவம் தொடர்பாக ஏன் பேசவில்லை என்பது குறித்து விஜய்யிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அதுகுறித்து விஜய் பேசாமல் இருப்பது ஒருவகையில் நல்லது. இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாகவும், ஒரு தரப்புக்கு எதிராகவும் கருத்து சொல்லாமல் இருப்பது விஜய்க்கு நல்லது." என தெரிவித்தார்.
- மதிமுக மேடைகளில் அதிகம் முழங்கியவர்.
- திமுகவில் இணைய ஆர்வம் காட்டினார். ஆனால் திமுகவால் கண்டுகொள்ளப்படவில்லை.
மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தமிழக வெற்றிக் கழகத்தில் அதன் தலைவர் விஜய் முன்னணியில் இணைந்தார். கடந்த சில நாட்களாகவே விஜய்க்கு ஆதரவாக பேசிவந்த நாஞ்சில் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். திராவிட சித்தாந்தம் கொண்ட இவர் தவெகவில் இணைந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடவேண்டிய முக்கிய விஷயம்.
யார் இந்த நாஞ்சில் சம்பத்?
துரை வைகோ போலவே எப்போதும் கழுத்தில் துண்டுடன் இருப்பவர் நாஞ்சில் சம்பத். மதிமுக மேடைகளில் அதிகம் முழங்கியவர். முதலில் திமுகவில் இருந்த இவர் வைகோ திமுகவில் இருந்து வெளியேறிய பொழுது, அவருடன் இணைந்து வெளியேறியவர். பின் மதிமுகவில் 19 ஆண்டுகள் பயணித்தார். அங்கிருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் திமுகவில் இணைய ஆர்வம் காட்டினார். ஆனால் திமுகவால் கண்டுகொள்ளப்படவில்லை. பின் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.
- நாஞ்சில் சம்பத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது தெரிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் கூறினார்.
- மருத்துவர்களிடம் பேசி நாஞ்சில் சம்பத்தின் உடல்நலம் குறித்து விசாரித்ததோடு, உரிய சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
நாகர்கோவில்:
இலக்கியவாதியான நாஞ்சில் சம்பத், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சுயநினைவின்றி அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
நாஞ்சில் சம்பத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது தெரிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் பேசி ஆறுதல் கூறினார். மருத்துவர்களிடம் பேசி நாஞ்சில் சம்பத்தின் உடல்நலம் குறித்து விசாரித்ததோடு, உரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் நாஞ்சில் சம்பத் உடல் நலம் பெற்று சுயநினைவு பெற்றார். இதனையடுத்து அவர், டுவிட்டரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், முதல்வரின் தனிக் கருணையில் இன்று புதியாய் பிறந்தேன். முதல்வரின் பரிவிற்கும், பாசத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நலமாக இருக்கிறேன். விரைவில் மேடையில் சந்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
- சோறுக்காக பெரியாரை அழுக்கு ஆக்குகிறார் சீமான்.
- பா.ஜ.க. ஒருபோதும் உயிர்பெற்று ஆட்சிக்கு வரமுடியாது.
ஈரோடு:
ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'இது பெரியார் மண்' என்ற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசினார்.
பெரியாரை கொச்சைப்படுத்தி கல் எறிந்தால் தான் பிழைப்பு நடத்த முடியும் என நாம் தமிழர் கட்சி இருக்கிறது என நினைக்கிறேன். சீமான், பெரியார் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்தால், எதிர்வினை ஆற்ற எங்களால் முடியும்.
பெரியார் இறந்து இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையில் சீமான் விமர்சனம் செய்வது ஏன்?. ஈனபையன் சீமான் பெரியார் பற்றி தவறாக பேசுகிறார். எங்கே சோறு கிடைக்கும் என்று பா.ஜ.க தாழ்வாரத்தில் படுத்துக்கொண்டு சோறுக்காக பெரியாரை அழுக்கு ஆக்குகிறார் சீமான்.
திராவிட இயக்கத்தை ஏன் பா.ஜ.க குறி வைக்கிறது என்றால், பெரியார் திராவிட இயக்கத்தினை முன் வைத்து வழிநடத்திச் செல்வதால் தான். சீமான் திராவிடத்தையும், தமிழ் தேசியம் குறித்து ஒரே மேடையில் விவாதம் செய்ய தயாரா? திராவிடம் என்றால் தாலாட்டு குழந்தை போன்று தெரிகிறதா?.
சீமான், ஜெயலலிதாவிடம் இருந்து ரூ.400 கோடியும், பா.ஜ.க.விடம் இருந்து ரூ.300 கோடியும் வாங்கினார். தானே பேசி தானே சிரிக்கும் பழக்கம் சீமானிடம் உள்ளது. பெரியார் பற்றி கொச்சையாக சொன்னதற்கு சீமானிடம் ஆதாரம் இருக்கிறதா?
பிரபாகரனை சீமான் சந்தித்தாராம்? சந்தித்தவர்கள் யாரும் சொல்லவில்லை. உலகத்தில் நிகரற்ற வீரன் நேற்றும், இன்றும், நாளையும் பிரபாகரன் தான்.
சீமான் பா.ஜ.க.வின் கைக்கூலி, அடியாள் என 10 வருடமாக சொல்லி வருகிறேன். நாம் தமிழர் கட்சிக்கு பால் ஊற்றும் நேரம் வந்துவிட்டது. கட்சியின் இறுதி ஊர்வலம் ஈரோட்டில் தான் நடக்கும்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையே இறக்குமதி செய்யப்பட்டவர் தான். ஆனால் எப்போது அவர் ஏற்றுமதி செய்யப்படுவார் என்று அந்த கட்சியில் இருப்பவர்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
முருகனை வைத்து சீமான் அரசியல் செய்யலாம் என்று பார்க்கிறார். ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்று சொல்லும் அண்ணாமலை, எப்போது ஆட்சிக்கு வருவார்கள் என அவரே சொல்லட்டும்.
கூவம் பாவத்தை போக்கினால் போக்கும், நத்தை ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்றாலும், வெற்றி பெறும். ஆனால், பா.ஜ.க. ஒருபோதும் உயிர்பெற்று ஆட்சிக்கு வரமுடியாது. பா.ஜ.க.விற்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது, கிடைக்க விடமாட்டோம்.
அதிகாரத்தை எப்படி பயன்படுத்தினாலும், பயப்பட மாட்டோம். பெரியார் கொள்கை மீட்டெடுக்க சாவக்கூட தயார். 100 ஆண்டுகள் கடந்தும் பெரியார் வாழ்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாகர்கோவிலில் இன்று நாஞ்சில் சம்பத் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை மக்கள் தூக்கி எறிந்து விட்டனர். தமிழகத்தின் மீது திணிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள், நீட் தேர்வு போன்றவற்றிற்கு தேர்தல் மூலம் மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு தண்ணீர் பெற்று தராத பாரதிய ஜனதா ஆட்சிக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அனுமதி, கேரளாவில் முல்லை பெரியாறு அணையை உடைத்து விட்டு புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி அளித்தது போன்ற செயல்களுக்கு தமிழக மக்கள் தேர்தல் மூலம் பதில் கூறி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சிலரை வைத்துக் கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று பாரதிய ஜனதா போட்ட கணக்கு தோல்வி அடைந்து விட்டது. தமிழகத்தில் பாரதிய ஜனதாவிற்கு கிடைத்த தோல்வி, இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வாக்காளர்களை போல இந்திய வாக்காளர்கள் விழித்திருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
தமிழகத்தின் வடமாவட்டங்களில் வலிமையாக இருந்த பா.ம.க., பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்ததால் கணக்கை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துடன் வலம் வந்த தே.மு.தி.க.வும் மக்களால் புறம் தள்ளப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் இத்தேர்தலில் மண் சார்ந்து, மக்கள் நலம் சார்ந்த சிந்தனையுடன் செயல்பட்டுள்ளனர். இதனால்தான் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியை பெற்றது.
தி.மு.க. கூட்டணியை ஆதரித்து நான், பிரசாரம் செய்தபோதே, தி.மு.க. கூட்டணிக்கு 38 தொகுதிகள் கிடைக்கும் என்று கருதினேன். தேர்தல் முடிந்ததும் இதனை தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலினிடம் தெரிவித்தேன். அதுதான் இப்போது நடந்துள்ளது.
தமிழகத்திற்கு இனி மு.க. ஸ்டாலினின் தலைமைதான் தேவை. அது காலத்தின் கட்டாயமும் ஆகும்.
தேர்தல் களத்தில் நின்ற டி.டி.வி. தினகரன் கும்பல் தேர்தலில் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். குறிக்கோள் இல்லாமல் ஒரு சிலருக்காக மட்டும் கட்சி நடத்தியவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டி உள்ளனர்.
இந்த தேர்தலில் கமல்ஹாசனுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. இனி அவர், அடுத்த தேர்தலுக்கு தான் மக்கள் முன் வருவார். அப்போது 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டு அரசியலில் இருந்து வெளியேறுவார்.
ரஜினிகாந்த் பாரதிய ஜனதா கட்சியை பாராட்டி பேசியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவர், பாரதிய ஜனதா கட்சியின் இன்னொரு முகமாகவே இருக்கிறது.
மத்திய மந்திரிசபையில் தமிழகத்திற்கு இடமில்லை. எந்த பதவியும் யாருக்கும் வழங்கப்படவில்லை. இதை நான், ஏற்கனவே எதிர்பார்த்தேன். பிரதமர் மோடி, புதிய இந்தியா என்று கூறி புறப்பட்டு விடுவார். இனி தமிழகத்தை கண்டுகொள்ள மாட்டார்.

தி.மு.க.வின் கொள்கைகளுக்கும், ம.தி.மு.க.வின் கொள்கைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே வைகோ மீண்டும் தி.மு.க.வில் இணைய வேண்டும். தென்தமிழகத்தின் குரலாக வைகோவின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.
தமிழகத்தின் தேனி தொகுதியில் காங்கிரசின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார். இது இளங்கோவன் மீது திணிக்கப்பட்ட தோல்வி ஆகும். தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க. 13 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இது அ.தி.மு.க.வினர் வசம் இருந்து தி.மு.க.விற்கு கிடைத்துள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெற்ற 9 தொகுதிகளிலும் பணம் பாதாளம் வரை பாய்ந்தது.
நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் வரும். அங்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி சார்பில் யார் போட்டியிட்டாலும் அவர்களே வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
📣 Our film #NenjamunduNermaiyunduOduRaja has been certified 'U'. A complete gala in theatres from June 14 🥳🎉🎊#NNORFromJune14@Siva_Kartikeyan | @KalaiArasu_ | @karthikvenu10 | @rio_raj | @KanchwalaShirin | @RjVigneshkanth | @DoneChannel1 | @SonyMusicSouthpic.twitter.com/3sAlQ2ohAM
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) May 24, 2019
புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கடந்த 27-ந் தேதி புதுவையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது நாஞ்சில் சம்பத் புதுவை கவர்னர் கிரண்பேடி குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து புதுவை மாநில பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தேர்தல் ஆணையாளர் கந்தவேலு, போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா ஆகியோரிடம் புகார் செய்தனர்.
புகாரில் கவர்னரின் பாலினம் குறித்தும், அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி நாஞ்சில் சம்பத் பேசியதாக கூறி இருந்தார். மேலும் நாஞ்சில் சம்பத் பேசியதற்கான ஆதாரத்தை சி.டி.யாகவும் அளித்திருந்தார்.
இந்த நிலையில் புதுவை அரசின் உள்துறை கூடுதல் செயலாளரும், கவர்னரின் சார்பு செயலாளருமான சுந்தரேசன் கவர்னர் கிரண்பேடி குறித்து அவதூறாக பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் டி.ஜி.பி. சுந்தரிநந்தாவிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் டி.ஜி.பி. சுந்தரி நந்தா தவளக்குப்பம் போலீசாருக்கு வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மீது 294 (ஆபாசமாக திட்டுதல்), 354 ஏ (பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்துதல்), 509 (புகழுக்கு களங்கம் ஏற்படுத்துதல் )ஆகிய 3 பிரிவுகளின் கீழ் தளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #NanjilSampath #kirenbedi
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரச்சாரம் செய்தார்.
தவளகுப்பம் நான்குமுனை சந்திப்பில் தொடங்கி அரியாங்குப்பம், முதலியார்பேட்டை ஆகிய பகுதியில் நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்தார்.
கட்சி அரசியலில் இருந்து விலகி கடந்த ஓராண்டாக இலக்கிய பணியில் ஈடுபட்டிருந்தேன். தற்போது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அரசை வீழ்த்தும் களத்தில் இல்லையென்றால் உயிரோடு இருப்பதற்கு அர்த்தமில்லை என்பதற்காக மீண்டும் தேர்தல் களத்திற்கு வந்துள்ளேன்.
ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடி மோடி ஊழல் செய்துள்ளார். மோடி இந்தியாவின் பன்முகத் தன்மையை பாழ்படுத்தி விட்டார். இந்தியாவின் மதச் சார்பின்மைக்கு மாரடைப்பு வந்துவிட்டது. மோடியின் ஆட்சியை எந்த தரப்பு மக்களும் விரும்பவில்லை. மோடி அரசை வீழ்த்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும் தயாராகிவிட்டனர்.

புதுவையில் ஆளும் அரசின் செயல்பாடுகளை கிரண்பேடி தொடர்ந்து முடக்கி வருகிறார்.
இவ்வாறு அவர் பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தை தொடர்ந்து நாஞ்சில் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தமிழகத்தில் 2-ம் இடத்தையும், எடப்பாடியின் அதிமுக 3-ம் இடத்தையும் பெறும். நான் மட்டுமே கொள்கையுள்ள அரசியல் வாதி. நான் 32 ஆண்டுகளாக ஒரே கொள்கையை பேசி வருகிறேன். இடம் மாறினாலும், தடம் மாறாமல் பயணிக்கின்ற ஒரே நபர் நான்.
காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி இயல்பான கூட்டணி, இயற்கையான கூட்டணி, ரத்தமும் சதையுமான கூட்டணி. பா.ஜனதா அ.தி.மு.க. கூட்டணி எண்ணையும் தண்ணீரும் போன்றது. காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது.
நான் பேசும் பொருள் எப்போதும் கொள்கை சார்ந்ததுதான். நான் பெரியார், அண்ணாவின் கொள்கைகளை மட்டுமே பேசுவேன். நான் இடம் மாறினாலும் தடம் மாற மாட்டேன். கருத்துக்கணிப்பில் பா.ஜனதா வெற்றி பெறும் என்பது மாய பிரசாரம். மோடிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுத்துவிடக்கூடாது என ஊடகத்தை எச்சரிக்கும் பொறுப்பும் எனக்கு உள்ளது.
பா.ஜனதா கோட்டை தோற்கடிக்கப்பட்டது என்பதை கடந்த சில தேர்தல்கள் தெரிவித்துள்ளது. பா.ஜனதாவின் அத்தியாயம் முடியப்போகின்றது என்பதையே 3 மாநில தேர்தல் அறிவித்துள்ளன. தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் பிரதமர் ஆவார். மோடி நாட்டைவிட்டு தப்ப பார்ப்பார். அவரை தப்ப விடமாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார். #nanjilsampath #parliamentelection
அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், நட்சத்திர பேச்சாளருமான நடிகை ஜெயதேவி விடுத்துள்ள அறிக்கையில், “மறைந்த முதல்வர் அம்மா நாஞ்சில் சம்பத்துக்கு அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி மற்றும் இன்கோவா கார் வழங்கி அழகு பார்த்தார். அம்மாவின் மறைவுக்கு பின்னால் அவர் துரோகிகள் கூட்டத்தில் சேர்ந்தார்.
நிலையான கொள்கை கோட்பாடு இல்லாத நாஞ்சில் சம்பத் இந்த பாராளுமன்ற தேர்தலில் அம்மாவால் தீயசக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட கட்சிக்கு ஆதரவளிப்பதாக கூறி உள்ளார். நிலையான கொள்கை பிடிப்பில்லாத இவரைப் போன்றோரை மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று கூறி உள்ளார்.








