search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palani Devasthanam"

    • விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.
    • நகரின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினந்தோறு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழாக்கள் மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு.

    இந்நிலையில் பக்தர்கள் வரும் முக்கிய பகுதியான அடிவாரம், கிரிவீதி, சன்னதிவீதி உள்ளிட்ட பகுதிகளில்அ திகளவு ஆக்கிரமிப்பு கடைகள் இருந்தன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைவதாகவும், குறிப்பாக அலகு குத்தி வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவதாகவும், புகார்கள் எழுந்தன.

    இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவஸ்தானத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதன்பின் படிப்படியாக நடைபாதை கடைகள் அகற்றப்பட்டதுடன் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் வருவதும் தடுக்கப்பட்டது. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.

    கடந்த வாரம் பழனி நகர்மன்ற தலைவர் தலைமையில் அனைத்து கவுன்சிலர்களும் தேவஸ்தான அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக வருகிற 13-ந் தேதி பழனியில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என நகர்மன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி நகர மக்களின் பொது வழிப்பாதை உரிமைகளை பாதுகாத்திடவும், பழனி நகராட்சியின் உரிமைகளை முடக்கும் தேவஸ்தானத்தை கண்டித்தும், நீதியரசர் கவனத்தை ஈர்த்திடும் வகையில் இந்த போராட்டம் நடைபெறும் என நகரின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

    விரைவில் உலக முருக பக்தர்கள் பேரவை மாநாடு நடைபெற உள்ள நிலையில் தேவஸ்தானத்திற்கும், நகராட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த போராட்ட சூழல் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அடிவாரம் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தேவஸ்தானம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
    • நகராட்சியின் 33 கவுன்சிலர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் பக்தர்களுக்கு இடையூறாக பல்வேறு இடங்களில் கடைகள் உள்ளதாகவும் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தன.

    இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரி வீதி பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு அதில் தடுப்புகள் ஊன்றப்பட்டு வாகனங்கள் வர முடியாத அளவுக்கு தடை ஏற்படுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சன்னதி வீதி, அடிவாரம் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தேவஸ்தானம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

    சாலையோர கடைகள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அகற்றப்பட்டதால் தங்களுக்கு வருவாய் குறைந்து விட்டது. கிரி வீதி வழியாக வரும் வாகனங்கள் தடுக்கப்பட்டதால் அதன் முலம் கிடைக்கும் வருவாயும் நின்று விட்டது என நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரமாக தெரிவித்தனர்.

    தேவஸ்தான நிர்வாகம் நேரடியாக நகராட்சி உரிமைகளில் தலையிடுவதால் அதனை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் தேவஸ்தான அலுவலகத்தின் முன் போராட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் கந்தசாமி, கவுன்சிலர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர்.

    மேலும் நகராட்சியின் 33 கவுன்சிலர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடைகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரம் பற்றி கவலைப்படாமல் தேவதஸ்தானம் செயல்படுவதாகவும் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் கோவில் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    ×