search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "postcard"

    • மார்ச் 8-ந் தேதிக்குள், 2500 வழங்குவது குறித்து அறிவிக்கவில்லை என்றால், சோனியா காந்திக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்புவோம்.
    • பெண்களுக்கு ரூ.2,500 வழங்குவதாக உறுதியளித்ததை நாங்கள் அவருக்கு நினைவூட்டுவோம்

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2500 வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

    ஆனால் இதுவரை இந்த திட்டம் கொண்டு வரப்படவில்லை.

    பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) எம்.எல்.சி. கே.கவிதா, பெண்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தெலுங்கானா காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க அஞ்சல் அட்டை இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

    பெண்களுக்கு மாதம் ரூ. 2500 வழங்க கோரி முதல் மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு 10 ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பி வைத்தார்.

    மகளிர் தினமான மார்ச் 8-ந் தேதிக்குள், 2500 வழங்குவது குறித்து அறிவிக்கவில்லை என்றால், நாங்கள் சோனியா காந்திக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்புவோம்.

    அவர் இங்கு வந்து பெண்களுக்கு ரூ.2,500 வழங்குவதாக உறுதியளித்ததை நாங்கள் அவருக்கு நினைவூட்டுவோம் என கவிதா தெரிவித்தார்.

    • ராகுல் காந்தி எம்.பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்.
    • சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பில், மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, பிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் பீட்டர் தலைமையில் சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.

    இந்நிகழ்விற்கு மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராஜ்குமார் எம்.எல்.ஏ, மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன் கலந்து கொண்டு அஞ்சல் அட்டை போராட்டத்தை துவக்கி வைத்தனர்.

    நிகழ்வில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார், மாவட்ட எஸ்சி.எஸ்டி பிரிவு தலைவர் கிள்ளிவளவன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முருகன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன், வட்டாரத் தலைவர்கள் ஞானசம்பந்தம், பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் சிவராமன், நகர நிர்வாகிகள் மொரார்ஜி, தேவநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×