என் மலர்
நீங்கள் தேடியது "Power generation damage"
- எந்திரங்கள், மின் மோட்டார்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
- 180 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூர்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் தலா 210 என 840 மெகாவாட், 2-வது பிரிவில் 600 மெகாவாட் என மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் முதல் பிரிவின் 3-வது அலகில் கடந்த 19-ந்தேதி மாலை பங்கர் டாப் எனப்படும் நிலக்கரி சேமிப்பு தொட்டி திடீரென உடைந்து விழுந்தது. இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். சுமார் 42 மீட்டர் உயரத்தில் 3-வது தளத்தில் இருந்த 165 டன் எடைகொண்ட பங்கர் டாப் 500 டன் நிலக்கரியுடன் விழுந்ததால் 2-ம் தளத்திலும், முதல் தளத்திலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. எந்திரங்கள், மின் மோட்டார்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
பங்கர் டாப் வழுவிழந்து விழுந்ததா?அல்லது சதி வேலை காரணமாக விழுந்ததா? என்பது இதுவரை கண்டுபிடிக்க ப்படவில்லை. இந்த பகுதியில் எப்போதும் தொழிலாளர்களும், கண்காணிப்பாளர்களும் நடமாட்டம் இருக்கும் பகுதியாகும். விபத்து நடந்தபோது மாலையில் தேநீருக்கான நேரம் என்பதால் அங்கு குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களே பணி யில் இருந்தனர். இதனால் தொழிலாளர்கள் உயிரிழ ப்பும், காயமும் குறைந்து ள்ளது.
இதனால் 3-வது அலகில் முழுமையாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பணியாளர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என தடைவிதிக்கப்பட்டுள்ளது.
3-வது அலகில் இருந்து 4-வது அலகுக்கு செல்லும் குடிநீர் குழாய், ஆயில் குழாய் உள்ளிட்டவை உடைந்துள்ளன. இதன் காரணமாக 4-வது அலகிலும் மின் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் அலகில் 180 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது.
இந்த நிலையில் 600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தின் '2-வது பிரிவில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கொதிகலன் டியூப் வெடித்ததன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதை சரி செய்த பிறகு கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. மீண்டும் 2-வது பிரிவில் நேற்று காலை கொதிகலன் டியூப் வெடித்ததையடுத்து மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
2 அனல் மின் நிலையங்களின் மொத்த மின்உற்பத்தி திறன் 1,440 மெகாவாட் என்ற நிலையில், தற்போது 180 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 87 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனால் 220 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே முதல் அணு உலையில் குளிர்விப்பான் பகுதியில் கோளாறு ஏற்பட்டதால் மூன்று ஆண்டுகளாக அது இயங்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதல் அணு உலை கட்டுமானப்பணி முடிவடைந்து கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கியது. 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதியன்று வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது.
தொடர்ந்து 2-வது அணு உலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி முதல் 2-வது அணு உலையில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கியது.இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது அணுமின் நிலையத்தில் 3,4-வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக 300 நாட்களுக்கு மேல் இயங்கிய அணு உலைகள் பராமரிக்கப்படுவது வழக்கம். அதன்படி அணு உலைகளில் பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி 2-வது அணு உலை வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதற்கிடையே முதலாவது அணு உலையிலும் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி நிறுத்தப்பட்டது. இதனால் கூடங்குளத்தில் உள்ள 2 அணு உலையிலும் மின்உற்பத்தி நடைபெறாமல் இருந்ததால் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதையடுத்து 2-வது அணு உலைவால்வில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கியது. மின்உற்பத்தி 600 மெகாவாட்டில் இருந்து 800 மெகாவாட் வரை நடைபெற்றது. மின் உற்பத்தி 1000 மெகாவாட்டை எட்ட இருந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு 2-வது அணு உலையில் திடீரென வால்வு பழுது ஏற்பட்டது.
இதையடுத்து அந்த அணு உலை நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மின் உற்பத்தி முழுவதுமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அணு உலை பழுதை நீரமைக்கும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் கூறும்போது, 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி செய்வதற்கு டர்பன் ஜெனரேட்டரில் ஒழுங்குப்படுத்துவதற்காக மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் ஒரு வாரம் நடைபெறும். பின்னர் 2-வது அணுஉலையில் மின்உற்பத்தி மீண்டும் நடைபெறும். ஏற்கனவே பராமரிப்பு பணிகள் காரணமாக முதலாவது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி முடி வடைந்து அடுத்த மாதம் மின் உற்பத்தி தொடங்கும்" என்றனர்.
கூடங்குளம் அணு மின்நிலையத்தில் 2 அணு உலைகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில் மின்வெட்டு மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.






