search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Risk of accidents"

    • தேவிபட்டினத்தில் 4முனை சாலை சந்திப்பில் சிக்னல்கள் இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • ஒளிரும் விளக்குகள் இன்றி எந்த வாகனம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ரோட்டில் ஈ.சி.ஆர். ஜங்ஷனில் ராமேசுவரம் ரோடு, மதுரை ரோடு, தேவிப்பட்டினம் ரோடு மற்றும் ராமநாதபுரம் ரோடு ஆகிய 4 முக்கிய சாலைகள் சந்திக்கினறன.

    பஸ், ஆட்டோ, வேன், லாரி தவிர கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த ரோட்டில் தேவிபட்டினம் நவபாஷாண கோவில், ராமேசுவரம் மற்றும் திருப்புல்லாணி செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வாகன போக்குவரத்தும் அதிகம் இருக்கிறது. இந்த சந்திப்பில் 4 புறமும் இருந்து வரும் வாகனங்க ளுக்கு தெரியும் வகையில் தானியங்கி சிக்னல்கள் இருந்தன. இவை அனைத்தும் தற்போது செயல்படாமல் பழுதாகியுள்ளது.

    பல மாதங்களாகியும் சிக்னல்களை சரி செய்யவில்லை. இங்கு ரவுண்டானாவும் இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. ஒளிரும் விளக்குகள் இன்றி எந்த வாகனம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பெரிய அளவில் விபத்துக்கள் நடக்காமல் தடுக்க முடியும், என இப்பகுதி மக்கள் தெரி வித்தனர்.

    • கடலூர்-புதுவை தேசிய நெடுஞ்சாலை முறையாக அமைக்காததால் பல பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
    • தற்போது முறையாக பராமரிக்கப்படாததால் பேரி கார்டுகளே (தடுப்பு கட்டைகள்) விபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிட்டது.

    புதுச்சேரி:

    கடலூர்-புதுவை தேசிய நெடுஞ்சாலை முறையாக அமைக்காததால் பல பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    அதனைத் தொடர்ந்து விபத்தை தடுக்கும் விதமாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் தற்காலிக விபத்து ஏற்படும் பகுதியில் பேரிகார்டு மற்றும் பேரல்கள் போட்டு இரு வழி சாலையாக வைத்திருந்தனர்.

    மேலும் பேரிகார்டுக்கு இடையே யாரும் செல்ல முடியாதபடி குருக்கில் மர கம்பத்தை கட்டி வைத்திருந்தனர். இதனால் வாகனத்தின் வேகம் மற்றும் விபத்தை குறைக்க முடிந்தது.

    இந்த நிலையில் சாலைக்கு நடுவில் போடப்பட்ட. பேரிகார்டுகள் முறையாக பராமரிக்கப்படாததால் பல இடங்களில் இருந்த மர கம்பங்கள் சேதமாகியும், இல்லாமலும் இருந்து வருகிறது.

    தற்போது முறையாக பராமரிக்கப்படாததால் பேரி கார்டுகளே (தடுப்பு கட்டைகள்) விபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிட்டது. அரியாங்குப்பம் முதல் கன்னியகோவில் வரை கடந்த சில தினங்களில் மட்டும் பேரிகார்டுகளால் 10-க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி உள்ளனர்.

    பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு அதிகாரிகள் மற்றும் தெற்கு பகுதி போக்குவரத்து போலீசார் உடனடியாக தற்காலிகமாக போடப்பட்ட பேரிகார்டுகளை சரிசெய்ய வேண்டும். வரும் புத்தாண்டிற்கு புதுவைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டு இருக்கின்றனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. புத்தாண்டில் விபத்தில்லா புதுவையாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்க பொது மக்கள் மற்றும் பாதசாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×