search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    4முனை சாலை சந்திப்பில் சிக்னல்கள் இல்லாததால் விபத்து அபாயம்
    X

    4முனை சாலை சந்திப்பில் சிக்னல்கள் இல்லாததால் விபத்து அபாயம்

    • தேவிபட்டினத்தில் 4முனை சாலை சந்திப்பில் சிக்னல்கள் இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • ஒளிரும் விளக்குகள் இன்றி எந்த வாகனம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ரோட்டில் ஈ.சி.ஆர். ஜங்ஷனில் ராமேசுவரம் ரோடு, மதுரை ரோடு, தேவிப்பட்டினம் ரோடு மற்றும் ராமநாதபுரம் ரோடு ஆகிய 4 முக்கிய சாலைகள் சந்திக்கினறன.

    பஸ், ஆட்டோ, வேன், லாரி தவிர கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த ரோட்டில் தேவிபட்டினம் நவபாஷாண கோவில், ராமேசுவரம் மற்றும் திருப்புல்லாணி செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வாகன போக்குவரத்தும் அதிகம் இருக்கிறது. இந்த சந்திப்பில் 4 புறமும் இருந்து வரும் வாகனங்க ளுக்கு தெரியும் வகையில் தானியங்கி சிக்னல்கள் இருந்தன. இவை அனைத்தும் தற்போது செயல்படாமல் பழுதாகியுள்ளது.

    பல மாதங்களாகியும் சிக்னல்களை சரி செய்யவில்லை. இங்கு ரவுண்டானாவும் இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. ஒளிரும் விளக்குகள் இன்றி எந்த வாகனம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பெரிய அளவில் விபத்துக்கள் நடக்காமல் தடுக்க முடியும், என இப்பகுதி மக்கள் தெரி வித்தனர்.

    Next Story
    ×