என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roof collapsed"

    • பாவூர்சத்திரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,604 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
    • சம்பவத்தன்று தலைமை ஆசிரியை ஜான்சி ராணி அறையில் இருந்து வெளியே வந்து மாணவிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1,604 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஜான்சி ராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் தனது அறையில் இருந்து வெளியே வந்து அந்த வழியாக வந்த மாணவிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது அலுவலகத்தின் மேற்கூரை பூச்சு திடீரென இடிந்து விழுந்தது.

    அந்த நேரத்தில் யாரும் அங்கு இல்லாததால் எவ்வித பாதிப்பு மற்றும் உயிர் சேதம் இன்றி அனைவரும் உயிர் தப்பினர். தகவல் அறிந்து பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக பழைய கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடங்கள் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

    ரே‌ஷன் கடை மேற்கூரை இடிந்து விழுந்ததில் தந்தை-மகன் காயம் அடைந்தனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணியில் ரே‌ஷன் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடம் பழமையானது என்பதால் சிதிலமடைந்து உள்ளது.

    பல இடங்களில் மேற்கூரை பெயர்ந்து காணப்பட்டதால் மிகுந்த அச்சத்துடனேயே பொதுமக்கள் ரே‌ஷன் கடைக்கு வந்து சென்றனர்.

    நேற்று அந்தப்பகுதியைச் சேர்ந்த பாண்டி (வயது 32).தனது மகன் கருப்பசாமியுடன் (10) ரே‌ஷன் கடைக்கு வந்தார். அவர்கள் பொருட்கள் வாங்க வரிசையில் நின்ற போது, சிதிலமடைந்த கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

    இதில் பாண்டி, கருப்பசாமி காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ரே‌ஷன் கடை 15 ஆண்டுகளுக்கு முன் புள்ள கட்டிடத்தில் செயல்படுவதால், வேறு கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×