என் மலர்
நீங்கள் தேடியது "Selva Vinayagar Temple"
- கலசத்திலிருந்து புனித நீர் கொண்டு விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருசாபிஷேகம் நடைபெற்றது.
- தொடர்ந்து செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
ஆத்தூர்:
ஆத்தூர் சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்மாள் கோவிலின் சந்திரபுஷ்கரணி தீர்த்த கரையில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலில் வருசாபிஷேகம் நடைபெற்றது. காலை மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. கலசத்திலிருந்து புனித நீர் கொண்டு விமான கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வருசாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- சாலை விரிவாக்க பணிக்காக கோவிலின் முன்புறம் இருந்த நவகிரகங்கள், மற்றும் சிலைகள் அகற்றப்பட்டது.
- செல்வ விநாயகர் கோவிலில் பாலாலய பூஜை நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடம் காந்தி ரோட்டில் செல்வ விநாயகர், பாலதண்டபாணி கோவில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில் நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.
மேலும் காந்தி ரோடு சாலை விரிவாக்க பணிக்காக கோவிலின் முன்புறம் இருந்த நவகிரகங்கள், மற்றும் சிலைகள் அகற்றப்பட்டது. இந்த நிலையில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது கோவில் திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த சிலநாட்களுக்கு முன்பு செல்வ விநாயகர் கோவிலில் பாலாலய பூஜை நடைபெற்றது.தொடர்ந்து சுவாமி சிலைகள் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டு, அருகே உள்ள பொன் காளியம்மன் கோவிலில் தனி அறையில் பாதுகாப்புடன் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பக்தர்கள் வழிபடுவதற்காக அத்தி மரத்தால் செய்யப்பட்ட செல்வ விநாயகர், பாலதண்டபாணி, சுவாமி சிலைகள், கோவில் அருகே தற்காலிகமாக இரும்பு தகடுகள் மூலம் அறை அமைக்கப்பட்டு அங்கு பக்தர்கள் சுவாமியை வழிபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கோவிலை சுற்றியுள்ள கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. இதற்கிடையே கோவிலில் உள்ள ஆலமரத்தையும்,வேப்ப மரத்தையும், வேருடன் பிடுங்கி எடுத்து மாற்று இடத்தில் மறு நடவு செய்ய பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கோவில் கோபுரத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது.
- இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கொடுமுடி:
கொடுமுடியை அடுத்த ஒத்தக்கடை சின்னப்பை யன்புதூரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதியதாக தீர்த்த விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த 2 சிலைகள் அமை ந்துள்ள கோவிலு க்கான கும்பாபிஷேக விழா கடந்த 8-ந் தேதி காலை 7 மணிக்கு கணபதி ஹோமத் துடன் தொடங்கியது.
தொடந்து நேற்று 2 மற்றும் 3-ம்கால யாக பூஜைகள் நிறைவுற்ற இன்று அதிகாலை 4 மணி க்கு 4-ம்கால யாக பூஜைகள் நடந்தன.
பின்னனர் அதிகாலை 5.30 மணிக்கு கோவில் கோபுரத்துக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. பின்னர் 5.45 மணிக்கு மேல் செல்வ விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து தொட ர்ந்து தசதானம், தசதரிசனம், மகா அபிஷேகம், அலங்கார பூஜைகளுடன் தீபாரதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வுகளும் அன்னதானமும் நடந்தன.
இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






